2025 ல் IPL கோப்பை வெல்லப்போவது MI.. CSK வாய்ப்பில்லை ஏன்??

MI is going to win the IPL trophy.

CRICKET: இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பை வீழ்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 அன்று தொடங்க உள்ளது. இந்த ஐபிஎல் தொலைவில் யார் வெற்றி பெறுவார் என ரசிகர்கள் ஆவலுடன் போட்டிக்காக காத்திருக்கின்றனர். இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரு அணிகளும் இதுவரை 5 கோப்புகளை வென்றுள்ளன. இந்நிலையில் ஆறாவது கோப்பையை யார் வெல்வது என ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இரு அணி ரசிகர்களும் இந்த ஆண்டு கோப்பையை சிஎஸ்கே தான் வெளிய போகிறது எனவும் மும்பை தான் வெல்லப்போகிறது எனவும் கருத்துக்கள் பகிர்ந்து வருகின்றன. பல கிரிக்கெட் வல்லுனர்களும் இந்த ஆண்டு கோப்பையை வெல்ல மும்பை அணிக்கு சிஎஸ்கே அணியை விட அதிக வாய்ப்புள்ளதாக கூறுகின்றன அதன் காரண பின்னணி என்ன என்பதை பார்ப்போம்.

சிஎஸ்கே அணியில் ருத்ராஜ் கெயிக் வாட், டெவான் கான்வே, ராகுல் திருபாத்தி, சிவம் துபே, தீபக் ஹூடா, ஜடேஜா, தோனி, ஷாம் கரண், அஸ்வின், பத்திராணா, நூர் அகமது, கலீல் அகமது இம்பேக்ட் பிளேயர் ஆக களமிறங்க அதிக வாய்ப்புள்ளது. இதுதான் இந்த அணியின் பிளேயிங் லெவனாக இருக்கும். இதில் தொடக்க இணை சிறப்பாக உள்ளது மிடில் ஆடர் சற்று மும்பை இந்தியன்ஸ் அணியை விட சொதப்பலாக உள்ளது எனவே கூறலாம்.

கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் சிவம் துபே , முதல் பாதி போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பிற பாதி போட்டிகளில் அவர் சொதப்பலான ஆட்டமே சில போட்டிகளின் தோல்விக்கு காரணமாகவும் இருந்துள்ளது. தீபக் ஹூடா மற்றும் ராகுல் திருப்பாத்தி இருவருக்கும் இதற்கு முன் விளையாடிய அணிகளில் போதுமான வாய்ப்புகள் கிடைக்கவில்லை பெரிய ரன் சேர்க்கவில்லை இந்த ஆண்டு அவர்களின் திறமை எவ்வாறு உள்ளது என போட்டியில் விளையாடிப்பின் தான் தெரியும்.

அடுத்ததாக மும்பை இந்தியன்ஸ் அணியின் பிளேயிங் லெவன் வில் ஜாக்ஸ், ரோகித் சர்மா, திலக் வர்மா, சூரியகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ராபின் மின்ஸ், நமன் தீர், மிட் செல் சான்டனார், தீபக் சஹார், ஜஸ்ப்ரித் பும்ரா, அல்லாஹ் கசான்பார், இம்பேக்ட் பிளேயராக ட்ரண்ட் போல்ட். தொடக்கினை சிறப்பாக உள்ளது. மேலும் மிடில் ஆர்டர் வலிமையான பேட்ஸ்மேன்கள் கடமை எழுதுவதால் சிஎஸ்கே வை விட மும்பை அணி வலிமையாக இருக்கிறது எனவே கூறலாம். மேலும் பல முன்னணி கிரிக்கெட் ஜாம்பவான்களும் இந்த ஆண்டு மும்பை அணி கோப்பை வெல்ல போவதாக கூறி வருகின்றனர்.

அது மட்டுமல்லாமல் ஒரு முக்கிய கருத்துக் கணிப்பு என்னவென்றால் கொல்கத்தா அணி ஒவ்வொரு முறையும் கோப்பை வென்ற பின் அடுத்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் இரு அணிகளும் மோதுகின்றன. அப்படி எழுதிப் போட்டியில் மோதும் இரு அணிகளில் இதுவரை நடந்த இரண்டு முறையும் மும்பை இந்தியன்ஸ் அணிதான் வெற்றி பெற்றுள்ளது.

கடந்த ஆண்டு கொல்கத்தா அணி கோப்பை வென்றது அதனால் இந்த ஆண்டும் இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி இறுதிப் போட்டியில் விளையாடி கோப்பை வெல்லும் என கிரிக்கெட் வல்லுனர்களால் கணிக்கப்பட்டுள்ளது.

குறிப்பு: (எந்த அணியை சார்ந்தும் இந்தச் செய்தி பதிவிடப்படவில்லை நடுநிலைத் தன்மையோடு பதிவிட்ட ஒரு செய்தி பதிவு என்பதை இந்த இடத்தில் பதிவு செய்து கொள்கிறோம்.)

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram