20 லட்சம் நகையை வைத்து விளையாட்டு காட்டிய குரங்கு!!!அதிர்ச்சியில் கோவில் சென்ற பக்தர்!!!

உத்தரப்பிரதேசம் பிருந்தாவனத்தில் நடந்த இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் பக்தர்களை பெரிதும் பரபரப்படையச் செய்தது. அலிகார் மாவட்டத்தை சேர்ந்த அபிஷேக் அகர்வால் தனது குடும்பத்துடன் பிருந்தாவனத்தில் தரிசனம் செய்ய வந்திருந்தார். அவரது மனைவியின் பையில் கிட்டத்தட்ட ரூ.20 லட்சம் மதிப்புடைய நகைகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவர்கள் தாக்குர் பாங்கே பிஹாரி கோவிலில் இருந்து திரும்பி வரும்போது, திடீரென குரங்கு ஒன்று பையை பறித்துக்கொண்டு மரத்தில் ஏறி மறைந்துவிட்டது. இந்நிகழ்ச்சி அப்பகுதியைச் சுற்றியுள்ள பக்தர்கள் மற்றும் கடையாளர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியது.

“என்ன நடக்கிறது என்றே புரியவில்லை, பையைப் பறித்த குரங்கு கண் இமைக்கும் வேகத்தில் மரத்தில் ஏறிப் போனது,” என அபிஷேக் கூறினார். சிலர் அந்த குரங்கிடம் இருந்து பையை மீட்க முயன்றனர். ஆனால், குரங்கு தனது வேகத்தால் அனைவரிடம் இருந்தும் தப்பித்து ஓடி விட்டது. இதனையடுத்து, போலீஸாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், பல மணி நேரம் தேடி, அருகிலுள்ள புதரில் அந்த பையை மீட்டனர். அதனை பரிசோதித்ததில், நகைகள் அனைத்தும் அதேபோல இருக்கக் காணப்பட்டன. பின்னர், போலீஸார் அந்த பையை அபிஷேக் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். “காவல் துறையின் விரைவான நடவடிக்கையால், பையை மீட்டு பாதுகாப்பாக திருப்பி கொடுக்க முடிந்தது,” என சதரின் வட்ட அதிகாரி சந்தீப் குமார் தெரிவித்தார்.

அப்பகுதியில் இது போன்ற குரங்கு தொல்லை அதிகரித்துள்ளதால், பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கவனமாக இருக்குமாறு போலீஸார் கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும், கோவில்கள் மற்றும் சுற்றுப்புறங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஊராட்சி நிர்வாகம் விரைவில் எடுக்குமாறு அவர்கள் வலியுறுத்தினர். இந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் கவலைக்கு இடம் ஏற்படுத்தி, அதிகாரிகள் தற்போது கூடுதல் காவல்துறை கண்காணிப்பை ஏற்படுத்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

 

 

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram