கோடை காலம் தொடங்கிய நிலையில் மக்களுக்கு இடையூறாக இருப்பது வெயில் காலத்தில் இரண்டு தான் ஒன்று வேர்க்குரு மற்றொன்று கொசுக்கடி. கோடை காலம் என்றாலே இந்த இரண்டு தொல்லைகளும் நமக்கு அவஸ்தையாக இருக்கும். வேலை கூட குடை கூலிங் கிளாஸ் இளநீர் பழ வகைகள் என பலவற்றை பயன்படுத்தி நாம் அதை சமாளிக்கலாம். ஆனால் இந்த கொசுக்கடியை சமாளிப்பது எப்படி என்றால் தற்போது கொசுவத்தி, ஆல் அவுட் என பல கெமிக்கல் ரசாயன மருந்துகள் இருந்தாலும், இயற்கை முறையில் எப்படி தடுக்க முடியும் என்பதை பார்ப்போம்.
இயற்கை முறையில் விஞ்ஞானி ஒருவர் கொசு ரத்தத்தை குடித்த போது ஆராய்ந்து பார்த்ததில் கொசுவிற்கு உள்ளே உள்ள ஒரு ரசாயனம் அதன் வயிறு நிறைந்ததை சிக்னல் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. அதே ரசாயனம் தக்காளி பழத்தில் உள்ளதையும் அவர் கண்டறிந்தார். அதன் பிறகு அவர் அதை வைத்து ஆராய்ச்சி செய்து பார்த்ததில். ஒரு சிலரை அழைத்து தக்காளி சாரினை மேலே தடவிக் கொண்டு சிலரும் எதுவும் தடவாமல் சிலரும் நிற்க வைத்து ஆராய்ச்சி செய்தார்.

அவர் நினைத்தபடி தக்காளி சாற்றினை தடவாத ஆட்களை கடித்தது அதேசமயம் தக்காளி சாயம் தடவிய ஆட்களை கொசு கடிக்கவே இல்லை. இதன் மூலம் தக்காளி சாறு பூசுவது மூலம் கொசு கடிப்பதை தவிர்க்க முடியும் என்பதையும் அவர் கண்டறிந்தார் இதன் மூலம் கொசு தக்காளிக்கு பயப்படுகிறது என அவர் ஆராய்ச்சியில் கண்டறிந்துள்ளார். பல கெமிக்கல்களை பயன்படுத்துவதை விட இது போன்ற இயற்கை முறையில் ஆன தக்காளியை முயற்சி செய்து பாருங்கள்.