3 வயது சிறுமியின் மர்ம மரணம்?? சித்தப்பாவின் காமவெறியின் கொடூரம்!!

திருவண்ணாமலை: மூன்று வயது சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம், தற்போது பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்காக மாறியுள்ளது. இந்த அதிர்ச்சிகரமான சம்பவம், திருவண்ணாமலை மற்றும் கடலூர் மாவட்டங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம், தந்தையின் உடல்நலக்குறைவால் சிக்கலாக வாழ்ந்து கொண்டிருந்தது. திடீரென இருதய நோயால் பாதிக்கப்பட்ட தந்தை, பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு உட்பட்டிருந்தார். அவரை பார்வையிட அவரது தம்பியும் திருவண்ணாமலையிலிருந்து வந்திருந்தார். அந்த தம்பி, தனது அண்ணனின் மனைவியையும் குழந்தைகளையும் “தற்காலிகமாக ஓய்வெடுக்க” திருவண்ணாமலைக்கு அழைத்துச் சென்றதாக கூறியுள்ளார். ஆனால், சில நாட்களுக்குப் பிறகு அந்த குடும்பத்துக்கு ஏற்பட்ட நிகழ்வு யாரும் எதிர்பாராத விதமாக அமைந்தது. ஜூன் 16ஆம் தேதி, குழந்தையின் தாயார், தனது  3 வயது குழந்தையின் இறப்பு சம்பந்தமான தகவலை உறவினர்களுக்கு தெரிவித்தார். மறுநாள், குழந்தையின் சடலத்துடன் தாயார் கடலூருக்கு பஸ்ஸில் வருவதாகக் கூறினார். ஆனால் பேருந்து நிலையத்தில் அவர் இல்லை மாறாக, சாலை வழியே சடலத்துடன் அழுதபடி நடந்து வந்ததை பலரும் கவனித்தனர்.

இதனால் உறவினர்களுக்கு சந்தேகம் எழுந்தது. உடலை அருகிலுள்ள மருத்துவமனையில் எடுத்துச் சென்று பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையின் போது, குழந்தையின் உடலில் பல்வேறு பற்கள் தடங்கள், அடிகள், மற்றும் பிறப்புறுப்பில் காயங்கள் இருப்பது தெரியவந்தது. மருத்துவ அறிக்கையில் பாலியல் வன்கொடுமை உறுதிப்படுத்தப்பட்டதும், போலீசார் தாயை தீவிரமாக விசாரிக்கத் தொடங்கினர். தொடக்கத்தில் தவிர்த்தும், பின்னர் இடைவிடாது எதிர்மறை  தகவல்களும் உண்மையை மறைத்ததும் தெரிந்தது.

அதன் பின்னர் நடைபெற்ற விசாரணையில், சிதைக்கும் உண்மைகள் வெளிவந்தன. தாயும், அவரை திருவண்ணாமலைக்கு அழைத்துச் சென்ற கணவர் தம்பியும், தகாத உறவில் இருந்ததாகவும், அந்த தம்பி தான் மூன்று வயது சிறுமியையும் தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாகவும் உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து, சிறுமிக்கு அடிபட்டதும், கடிபட்டதும், தொடர்ந்து வலியால் பாதிக்கப்பட்டதும் விளக்கப்பட்டன. ஒரு கட்டத்தில், அந்தக் குழந்தை வலியால் தாங்க முடியாமல் உயிரிழந்தது தெரியவந்தது. குற்றவாளி திருவண்ணாமலையில் போலீசாரால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளார். அவர் தப்பிக்க முயன்றபோது ஏற்பட்ட விபத்தில் அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. போலீசார் அவரையும், தாயாரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

 

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram