ஒட்டாவா: இந்திய பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்த நிலையில் கன்னட பயணத்தை முடித்து குரோஷியாவிற்கு பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். முதலில் சைப்ரஸ் நாட்டிற்கு சென்ற அவர் விமான நிலையத்திலிருந்து நிக்கோலஸ் கிறிஸ்டோலிஸால் வரவேற்கப்பட்டார். சைப்ரஸ் நாட்டின் முக்கிய தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு சில ஒப்பந்தங்களில் கையெழுத்திட வாய்ப்புள்ளதாக இருந்தது.
பின் கனடா பயணம் மேற்கொண்டவர் ஜி7 மாநாட்டில் கலந்து கொண்டார்.கனடாவில் நடைபெற்ற ஜி 7 மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு கனடா அழைப்பு விடுத்ததன் காரணமாக பிரதமர் நரேந்திர மோடி கனடா சென்றுள்ளார்.
ஜி7 மாநாட்டிற்கு பிரதமருக்கு அழைப்பு வருமா? என்ற எதிர்பார்ப்பில் இந்த கனடா அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. பிரதமர் மோடி அரசு முறை பயணமாக மூன்று நாட்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில் தற்போது குரோஷியாவிற்கு புறப்பட்டார். கடந்த 15 ஆம் தேதி சைப்ரஸ் சென்று சைப்ரஸ் ஜனாதிபதியை சந்தித்தார். என் மாநாட்டில் கன்னட பிரதமர் இத்தாலி பிரான்ஸ் போன்ற பல்வேறு நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
இந்நிலையில் கனடாவின் இருந்து பயணத்தை நிறைவு செய்து பிரதமர் மோடி அங்கிருந்து புறப்பட்டு குரோஷியாவிற்கு சென்றுள்ளார். குரோஷியா செல்லவிருக்கும் பிரதமர் குரோசியாவின் ஜனாதிபதி சோரன் மிலனோவ் மற்றும் பிரதமர் பென்குவிக்கை சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பின் மூலம் இருநாட்டு உறவு போன்ற பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளது.