சினிமா: நவீன் சந்திரா, அபிராமி என பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்து வெளிவந்த திரைப்படம் லெவன். இந்தத் திரைப்படம் குறித்து தற்போது விமர்சன கருத்தை தெரிவித்துள்ளார் நவீன் சந்திரா.
ஏப்ரல் 29 2025 அன்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் லெவன். இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நவீன் சந்திரா அபிராமி மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் வெளியான போது பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால் வெளியான பின் கொஞ்சம் தாமதமாக அந்த படத்திற்கான வரவேற்பு என்பது அதிகமாகவே கிடைத்தது என கூறலாம்.
நாட்கள் கடந்து செல்ல படத்தின் மீதான எதிர்பார்ப்பு மற்றும் விமர்சனம் என்பது நல் வரவேற்ப்பை பெற்றது. தொடர்ச்சியாக நடைபெற்று வரும் கொலை அதனை கண்டறியும் நவீன் சந்திரா அதனை யார் செய்வது காரணம் என்ன என்பதை கதைக்களமாக கொண்டு உருவான லெவன் திரைப்படம் தாமதமாக வரவேற்பு பெற்றது.
இது குறித்து நவீன் சந்திரா பேட்டியில் கூறுகையில், இப்போது பலரும் லெவன் திரைப்படம் வெளியான போது அதிக வரவேற்பு கிடைத்திருக்க வேண்டும் என வருத்தப்படுகிறார்கள். ஆனால் இந்தத் திரைப்படம் வெளியான போது இப்போது இருக்கும் இந்த வரவேற்பு கிடைக்கவில்லை என்பதை நினைத்தால் எனக்கும் வருத்தம் தான். ஆனால் படத்துக்கு இப்போது மக்கள் கொடுக்கும் இந்த ஆதரவு மிகவும் சந்தோஷத்தை தருகிறது என கூறியுள்ளார்.