NEET மறுதேர்வு நடத்த முடியாது!! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

மின்வெட்டு காரணமாக தேசிய தகுதி மற்றும் சேர்க்கைத் தேர்வு (NEET) எழுத முடியவில்லை என்று கூறி, மறுதேர்வு நடத்தக் கோரி மாணவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இதனால் மாணவர்களிடையே ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 16 மாணவர்கள், கடந்த மே மாதம் நடைபெற்ற NEET தேர்வின்போது கனமழையால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், கேள்விப் பேப்பரை முழுமையாக படிக்கவும், OMR பதில்பத்திரத்தை நிரப்பவும் சிரமப்பட்டதாக தெரிவித்தனர். அதனால் அவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் அந்த மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்த உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு மாணவர் சமூகத்திலும் கல்வித்துறையிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அதே கோரிக்கையை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மறுதேர்வு நடத்த முடியாது என்று தெளிவுபடுத்தியுள்ளது.

நீதிபதிகள் கூறுகையில், “ஒருசில மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்த உத்தரவிட்டால், நாடு முழுவதும் 20 லட்சம் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும். தேர்வு முறையின் நம்பிக்கை சீர்குலையக்கூடும்” என தெரிவித்தனர்.இதன் மூலம் ஒரே விஷயத்தில் இரண்டு மாநில உயர்நீதிமன்றங்கள் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியுள்ளன. இதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் குழப்பத்தில் உள்ளனர். இந்த விவகாரம் உச்ச நீதிமன்றம் வரை செல்லும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாக சட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேசமயம், இனி இத்தகைய பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்க, முக்கிய தேர்வுகளின் போது மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகளை உறுதிசெய்யவேண்டும் என்ற கோரிக்கையும் மாணவர்களிடையே எழுந்துள்ளது.

 

 

 

 

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram