காமுக தந்தைக்குத் தூக்கு தண்டனை 15 வயது மகளைச் சீரழித்த கொடூரம் – நெல்லை நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பு
திருநெல்வேலி: சொந்த மகளையே பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய கொடூர தந்தைக்குத் தூக்கு தண்டனை விதித்து, திருநெல்வேலி போக்சோ சிறப்பு நீதிமன்றம் இன்று வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
சம்பவத்தின் பின்னணி: நெல்லையைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அந்தச் சிறுமி கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்தனர். இதுகுறித்து போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், போலீசார் நடத்திய விசாரணையில் அந்தச் சிறுமியை அவரது தந்தையே நீண்ட நாட்களாகப் பாலியல் வன்கொடுமை செய்தது வெளிச்சத்திற்கு வந்தது.
DNA பரிசோதனை கொடுத்த சாட்சி: இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பாகப் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், தந்தையைக் கைது செய்தனர். இதற்கிடையில் சிறுமிக்குக் குழந்தை பிறந்தது. அந்தத் தந்தை தான் குற்றவாளி என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க, குழந்தைக்கு DNA (டிஎன்ஏ) பரிசோதனை செய்யப்பட்டது. அந்தப் பரிசோதனையின் முடிவில், சிறுமிக்குப் பிறந்த குழந்தைக்கு அவர் தான் தந்தை என்பது 100% உறுதியானது.
நீதிமன்றத்தின் சாட்டையடி: இந்த வழக்கைத் திருநெல்வேலி போக்சோ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது. அனைத்துச் சாட்சியங்கள் மற்றும் அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், இன்று நீதிபதி தீர்ப்பளித்தார். பெத்த மகளையே சிதைத்த அந்தத் தந்தையின் செயல் மன்னிக்க முடியாத கொடூரம் எனக் குறிப்பிட்ட நீதிபதி, அவருக்கு தூக்கு தண்டனை விதித்து அதிரடி உத்தரவிட்டார்.
குற்றம் செய்தவர் தந்தை என்பதால் தயவு காட்டாமல், சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது என்பதை இந்தத் தீர்ப்பு உறுதி செய்துள்ளது.


