கனரா வங்கியில் புதிய மாற்றம்! வாடிக்கையாளர்களுக்கு வரவேற்பு!!!

பொதுத்துறை வங்கியான கனரா வங்கி தனது அனைத்து சேமிப்பு கணக்குகளில் (Savings Account) சராசரி மாதாந்திர இருப்புத் தொகை (AMB) விதியை ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த மாற்றம் 2025 ஜூன் 1 முதல் அமலுக்கு வந்தது.

இதன் மூலம் வாடிக்கையாளர்கள் எந்தவிதமான அபராதமும் இல்லாமல் கணக்கில் எவ்வளவு வேண்டுமானாலும் தொகையை வைத்திருக்கலாம். இதுவரை, நகர மற்றும் மெட்ரோ கிளைகளில் ரூ.2,000, அரைநகர கிளைகளில் ரூ.1,000 மற்றும் கிராம கிளைகளில் ரூ.500 என்ற குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்க வேண்டியிருந்தது. அந்தத் தொகையை வைக்கத் தவறினால், ரூ.25 முதல் ரூ.45 வரை அபராதம் விதிக்கப்பட்டது.

 

 

இப்போது புதிய மாற்றத்தினால், சாதாரண சேமிப்பு கணக்குகள், ஊதிய கணக்குகள் மற்றும் NRI சேமிப்பு கணக்குகள் உட்பட அனைத்து சேமிப்பு கணக்குகளும் குறைந்தபட்ச இருப்புத் தொகை அபராதத் தடைகளை நீக்கி, வாடிக்கையாளர்களுக்கு வசதி அளிக்கும் வகையில் மாற்றப்பட்டுள்ளன. ஊதியதாரர்கள், மூத்த குடிமக்கள், மாணவர்கள், NRI மற்றும் புதிய வங்கி பயனாளிகள் உள்ளிட்ட பலருக்கும் இந்த மாற்றம் சிறப்பான நன்மையை அளிக்கும். வங்கி சேவைகளை அனைவரும் எளிதில் பெறக்கூடிய வகையில் மாற்றம் செய்யும் நோக்கில் கனரா வங்கி இந்த முடிவை எடுத்துள்ளது.

மேலும் வட்டி விகிதங்கள் மற்றும் சேவை கட்டணங்கள் குறித்து கூடுதல் தகவலுக்கு வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கலாம். இந்த மாற்றம் கனரா வங்கி வாடிக்கையாளர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram