நாளை முதல் இந்தியாவில் ஏற்பட இருக்கும் புதிய மாற்றங்கள்!!

ஜூன் 1, 2025 முதல் இந்தியாவில் பல முக்கிய நிதி மற்றும் சேவை மாற்றங்கள் அமலுக்கு வரவுள்ளன. இவை உங்கள் தினசரி நிதி நடவடிக்கைகள் மற்றும் செலவுகளை நேரடியாக பாதிக்கக்கூடியவை. EPFO 3.0 எனப்படும் புதிய டிஜிட்டல் மேம்பாடு ஜூன் 2025 முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் ஊழியர்கள் தங்கள் பி.எப். (PF) பணத்தை UPI மற்றும் ATM வழியாக உடனடியாக (அதாவது, சில நிமிடங்களில்) ₹1 லட்சம் வரை திரும்பப் பெற முடியும். மேலும், பி.எப். கணக்கு விவரங்களை ஆன்லைனில் திருத்தும் வசதி மற்றும் தானாகவே PF கணக்குகளை மாற்றும் (auto-transfer) வசதி வழங்கப்பட உள்ளது. மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் நேரங்கள் மாற்றப்பட்டுள்ளன.  ஆஃப்லைன் பரிவர்த்தனைகள் பகல் 3 மணி வரை, ஆன்லைன் பரிவர்த்தனைகள் இரவு 7 மணி வரை செய்யலாம். இது முதலீட்டாளர்களுக்கு அதிக நெகிழ்வை வழங்கும். கிரெடிட் கார்டு விதிமுறைகள் மற்றும் புதிய கட்டணங்கள் மற்றும் வரம்புகள்,
Kotak Mahindra Bank மற்றும் HDFC Bank போன்ற முக்கிய வங்கிகள் ஜூன் 1 முதல் கிரெடிட் கார்டு விதிமுறைகளை மாற்றுகின்றன.  இதில், auto-debit தோல்விக்கு புதிய கட்டணங்கள், fuel, utility bills, rent போன்ற செலவுகளுக்கு reward points குறைப்பு, மற்றும் lounge access க்கு புதிய நிபந்தனைகள் உள்ளடக்கப்படுகின்றன.

ஜூன் 1 முதல், 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் விலை ₹30–₹40 வரை குறையக்கூடிய வாய்ப்பு உள்ளது. இது குடும்ப செலவுகளில் சிறிய நிவாரணமாக இருக்கும். UIDAI வழங்கும் இலவச ஆதார் விவரங்கள் புதுப்பிக்கும் வாய்ப்பு ஜூன் மாதத்தில் முடிவடைகிறது. உங்கள் முகவரி அல்லது பிற விவரங்களை புதுப்பிக்க விரும்பினால், விரைவில் நடவடிக்கை எடுக்கவும். இந்த மாற்றங்கள் உங்கள் நிதி திட்டமிடல் மற்றும் செலவுகளை நேரடியாக பாதிக்கக்கூடியவை. உங்கள் நிதி நடவடிக்கைகள் மற்றும் சேவைகளை இம்மாற்றங்களுக்கு ஏற்ப ஒழுங்குபடுத்தி, நன்மைகளை பெறுங்கள்.

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram