சென்னை: தற்பொழுது போலி ஆவணங்கள், ஆள்மாறாட்டம், பத்திரப்பதிவு மோசடிகள் என மோசடிகள் அதிகரித்து விட்டன. அந்த வகையில் ஆள் மாறாட்டம் செய்து போலி ஆவணங்களை கொண்டு பத்திர மோசடியில் இறங்கினால் ரத்து செய்ய முடியும். சொத்து உரிமையாளர்களை ஏமாற்றி அவர்களுக்கு தெரியாமல் போலி ஆவணங்களை தயாரித்து பத்திர பதிவு நடைபெறுகிறது. இதை ரத்து செய்ய கோர்ட்டுக்கு செல்ல வேண்டி இருந்தது, இப்போது ஐஜியே இதனை ரத்து செய்யலாம் என்பது வெளியிட்டுள்ள அறிவிப்பாகும்.
நிலங்களை வாங்குவதற்கும், விற்பதற்கும் பத்திரங்கள் கட்டாயமாக்கிய போதிலும் போலி பத்திரங்களை தயார் செய்து மோசடியில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. இந்தப் போலி பத்திரங்கள் உண்மையான பத்திரங்களை ஒத்திருப்பது குறிப்பிடத்தக்கது. போலியான ஆவணங்கள் மற்றும் ஆள் மாறாட்டம் கண்டறியப்பட்டால் பத்திரப்பதிவை ரத்து செய்ய உயர் நீதிமன்றத்திற்கு மட்டுமே அனுமதி உள்ளது என்ற நிலையில் இருந்து தற்பொழுது இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
பாத்திரங்கள் ரத்து மிகவும் தாமதமாவதால் இந்த சட்டம் அமலுக்கு வர இருக்கிறது. அதன்படி, 2022 ஆகஸ்ட் 16 ஆம் தேதி முதல் நடைமுறையில் இருந்த பத்திர பதிவு திருத்த சட்ட மசோதாவின் கீழ் 1100 பத்திரங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் 1908 இல் பதிவு சட்டத்திற்கு மாறாக 2025 ஆம் ஆண்டு பதிவு சட்டம் புதிதாக அறிமுகம் செய்ய இருக்கிறது.
பொதுமக்களுக்கு 30 நாட்கள் அவகாசம் தரப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் தவறான தகவல்களை கொண்டு பதிவு செய்யப்பட்ட போலி பத்திரங்களை ரத்து செய்யலாம் என்றும், போலி பத்திரங்களை ரத்து செய்ய பதிவுத்துறை ஐஜி அதிகாரம் பெற்றவர் என்றும் பதிவுத்துறை அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். இந்த புதிய சட்டம் அமலுக்கு வந்தால் போலி பத்திரங்களின் அவசியம் இருக்காது. மேலும், மோசடிகள் ஏற்படுவதை தடுக்கலாம் என்றும் பதிவு துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.