இனி பின்கோடு எல்லாம் தேவையே இல்லை!! களம் இறங்க உள்ளது டிஜிபின்!!

No need for a PIN anymore!

வளர்ந்து வரும் இந்த நவீன காலகட்டத்தில் அனைத்து இடங்களிலும் ஆன்லைன் ஆர்டர்கள் அதிகரித்து விட்டுள்ளன. இதுவரை பின்கோடு என்கின்றதன் மூலம் குறிப்பிட்ட பகுதிக்கு சென்று அவர்களை காண்டாக்ட் செய்து அட்ரஸ் இருக்கும் இடத்திற்கு வரக்கூடிய நிலைமை உள்ளது. இதனை எளிதாக்கும் முன் நோக்கில், தற்சமயம் ஹைதராபாத் ஐஐடி, இஸ்ரோ மற்றும் தேசிய ரிமோட் சென்சிங் மையம் இணைந்து டிஜிபின் முறையை அறிமுகம் செய்ய உள்ளது.

இது ஒவ்வொரு நான்கு மீட்டர் தொலைவிற்கு ஒரு டிஜிபின் மூலம் அமைக்கப்பட உள்ளது. டிஜிபின் என்பது 10 இலக்க எண் மற்றும் ஆங்கில எழுத்துக்கள் கலந்த கலவையாக உருவாக்கப்பட உள்ளது. இதன் மூலம் ஒரு நபருக்கு வரும் கொரியர் ஆனது அவர்களை காண்டாக்ட் செய்யாமலேயே அவர்கள் வழங்கும் டிஜி பின் குள் வந்து டெலிவரி செய்யப்படும்.

இது நகர்புறம் மட்டுமல்லாமல், கிராமப்புறம் கடல் வளம் மலைப்பகுதிகள் ஆகியவற்றிற்கும் சிறப்பாக பொருந்தும். இதனை பெறுவதற்கு, https://dac.indiapost.gov.in/mydigipin/home என்கின்ற பாதுகாப்பான வலை அட்ரஸ்சில் தங்கள் லொகேஷன் உள்ளிட்டவுடன் தங்களுக்கான டிஜிபின் உருவாக்கப்பட்டு உங்களுக்கு பகிரப்படும் என்று தகவல் வெளியிட்டுள்ளது. இதனால் எந்த ஒரு தனித்துவ பாதிப்பும் ஏற்படாது எனவும், அட்ரஸில் எந்த ஒரு மாற்றமும் இருக்காது எனவும் தெரிவித்துள்ளது.

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram