ஈரான் அணு உலைகள் அழியவில்லை!! செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட பரபரப்பு தகவல்!! 

Nuclear reactors are not destroyed!! !
வாஷிங்டன்: அமெரிக்கா ,ஈரான் மீது தாக்குதல் நடத்தியது முக்கிய அணு உலைகள் தாக்கப்பட்டது என அமெரிக்கா செய்தியாளர்களிடம் டிரம்ப் கூறியிருந்தார். ஈரான் மீது “ஆபரேஷன் ரைசிங் லைன்” என்ற பெயரில் ஜூன் மாதம் 13ஆம் தேதி இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு அணு ஆயுத பயன்பாட்டிற்கு எதிராக தாக்குதல் என இஸ்ரேல் சார்பில் தெரிவித்திருந்தது.
இஸ்ரேல் மீது பதிலடி தாக்குதலாக ஈரானும் தாக்குதல் நடத்தியது. போர் பதற்றம் அதிகரித்த நிலையில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா போரில் இறங்கியது. அதன்படி எஸ்பஹான், பர்த்தவ் மற்றும் நடான்ஸ் போன்ற அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்டது. அமெரிக்காவின் தி நியூயார்க் டைம்ஸ் மற்றும் சி என் என் செய்தி நிறுவனங்கள் அறிவித்த செய்தியில், அமெரிக்கா நடத்திய தாக்குதலின் போது அணுசக்தி உலைகள் முழுமையாக அழிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.
தற்காலிக பாதிப்புகளை மட்டுமே ஏற்படுத்தியதாக பாதுகாப்பு உளவு அமைப்பு நடத்திய சோதனையில் தெரிந்தது என்று கூறியிருந்தது. இதனால் தற்போதைக்கு அணு திட்டத்தில் ஈடுபட முடியாமல் இருக்கும் நிலை மட்டுமே உள்ளது என தெரிவித்திருந்தது. மேலும், ஈரானின் அணு உலைகள் செயல்படும் வகையில் நன்றாக உள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.
செறிவூட்டப்பட்ட யுரேனிய பொருட்கள் எச்சரிக்கையாக வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு விட்டன என்று தெரிவிக்கப்பட்டது. அமெரிக்காவிலிருந்து வெளிவரும் செய்திகள் மூலம் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது அணு உலைகள் முழுமையாக அழியவில்லை என்றும் அவை பாதுகாப்பாக செயல்படும் வகையில் நன்றாக உள்ளன என்றும் அளித்த தகவல் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது.
Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram