சேலம்: சேலம் மாவட்டத்தில் உள்ள சூரமங்கலம் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் பாண்டி. 70 வயது ஆகும் இவருக்கு இரண்டாவது திருமணத்திற்கு வரன் தேடி வந்திருக்கிறார் அவரது மகன். மகன் தனக்கு திருமணம் செய்து வைக்க சொன்னாலும் ஆனால் தந்தை மறுப்பு தெரிவிக்க ஏற்பட்ட விபரீதத்தில் ஒருவர் ஜெயிலில் மற்றொருவர் மருத்துவமனையில் இருக்கின்றனர். சூரமங்கலம் நெடுஞ்சாலை சேர்ந்தவர் 70 வயது ஆகும் பாண்டி என்பவர். மனைவி சண்முகவள்ளி சமீபத்தில் உயிரை மாய்த்து கொண்டுள்ளார்.
இரண்டு மகன்கள் உள்ள நிலையில் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும்படி தொந்தரவு கொடுத்துள்ளார் ஊழியர். தமிழக வனத்துறையில் வனவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவரது முதல் மகன் மணி B.COM (CA) படித்து வாகன உதிரி பாகங்கள் விற்பனை கடை ஒன்று வைத்து நடத்தி வருகிறார். இரண்டாவது மகன் சேலத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார்.
நேற்று காலையில் தந்தைக்கும் மகனுக்கும் திருமணத்தை வைத்து தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதில், ஆத்திரமடைந்த மகன் தந்தையின் தலையில் இரும்பு கம்பியை வைத்து அடித்து விட்டு கத்தியை எடுத்து கழுத்தை அறுக்கவும் முயன்றுள்ளார்.
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் தந்தையை மீட்டு ஆம்புலன்சில் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். தந்தையை தாக்கியதற்காக மணியை பிடித்து விசாரணை நடத்தியதில் உதிரி பாகங்கள் விற்பனை கடை வைத்திருப்பதும், தந்தையிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்வதும், இதனால் அடிக்கடி தவறாக ஏற்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.
70 வயதில் இரண்டாவது திருமணத்திற்கு விளம்பரம் செய்ததை கண்டித்து தனக்கு திருமணம் செய்து வைக்காமல் பெண் தேடுவதற்க்காக தந்தையின் மீது கோபமாக இருந்துள்ளார் மணி. ஆத்திரத்தில் தந்தையை தாக்கியதாக கூறியதை அடுத்து மணியை கைது செய்தார் சூரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி. (குறிப்பிட்டுள்ள பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது)