கோயம்புத்தூர்: தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பரவலாக மழை பெய்து வருகிறது. கோவை மாவட்டத்தின் சில வாரங்களாகவே தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கோவை மாவட்டத்திற்கு இன்று இந்திய வானிலை ஆய்வு மையம் மழை காரணமாக ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தின் படி மழை நிலவரப்படி, அதிகபட்சமாக சோலையார் பகுதியில் 175 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. சின்ன கல்லாறு 119 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
சின்கோனா மற்றும் வால்பாறை தாலுகாவில் முறையை 117 மில்லி மீட்டர் மற்றும் 91 மில்லி மீட்டர் பதிவாகியுள்ளது. மேலும், பொள்ளாச்சியில் 68 மில்லி மீட்டர் மழையும், சிறுவானி அடிவாரத்தில் 60 மில்லி மீட்டர் மழையும், பதிவாகியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வால்பாறை வட்டத்திற்கு பள்ளிகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டது.
கோவை மாநகரில் விட்டுவிட்டு மழை பெய்து வருவதால் சாலைகள் மோசமான நிலையில் உள்ளதாக பள்ளி விடுமுறையை வழங்கியுள்ளார் மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர். கனமழையால் நேற்று திடீரென சாலையில் உப்பிலிபாளையம் பகுதியில் பள்ளம் உருவானது. கனமழையால் மக்கள் அனைவரும் கவனமாக பயணிக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.
கனமழை காரணமாக பில்லூர் அணைகள் மற்றும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பில்லூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியதால் மூன்றாவது முறையாக நிரம்பியுள்ளது என கூறப்படுகிறது.