பான் கார்டு வச்சிருக்கீங்களா?? ஆதார் இணைப்புக்கு இன்று கடைசி நாள்!! உடனே செக் பண்ணுங்க!!

pan-aadhaar-linking-deadline-december-31-penalty-warning

மத்திய வருமான வரித்துறை வழங்கிய நீண்டகால அவகாசம் இன்றுடன் (டிசம்பர் 31) நிறைவடைகிறது. உங்கள் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இன்னும் இணைக்கவில்லை என்றால், இன்று நள்ளிரவு 12 மணிக்கு மேல் உங்கள் பான் கார்டு வெறும் செல்லாத அட்டையாக மாறிவிடும்.

ஏன் இப்போதே இணைக்க வேண்டும்? (முக்கிய காரணங்கள்):

  • 10,000 ரூபாய் அபராதம்: இதுவரை 1,000 ரூபாய் அபராதத்துடன் இணைக்க வாய்ப்பு இருந்தது. ஆனால் நாளை முதல் இந்த அபராதத் தொகை பல மடங்கு அதிகரிக்கலாம் அல்லது உங்கள் பான் கார்டு முழுமையாக முடக்கப்படலாம்.

  • பேங்க் டிரான்ஸாக்ஷன் கட்: பான் கார்டு முடக்கப்பட்டால், வங்கியில் பெரிய தொகையை டெபாசிட் செய்ய முடியாது. லோன் வாங்குவது, கிரெடிட் கார்டு அப்ளை செய்வது என எல்லாமே ‘ஸ்டாப்’ ஆகிவிடும்.

  • பங்குச் சந்தை முதலீடு: நீங்கள் ஷேர் மார்க்கெட் அல்லது மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்பவர் என்றால், பான் கார்டு இல்லாமல் ஒரு பைசா கூட டிரேடிங் செய்ய முடியாது.

  • சேலரி கிரெடிட் சிக்கல்: சில நிறுவனங்களில் பான் கார்டு ஆக்டிவ்வாக இல்லையென்றால் சம்பளம் பெறுவதிலும், டி.டி.எஸ் (TDS) பிடித்தம் செய்வதிலும் சிக்கல்கள் ஏற்படும்.

தப்பிப்பது எப்படி? உடனே incometax.gov.in இணையதளத்திற்குச் செல்லுங்கள். ‘Link Aadhaar’ ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் பான் மற்றும் ஆதார் எண்களை உள்ளிடுங்கள். ஓடிபி (OTP) மூலம் சரிபார்த்து 1,000 ரூபாய் கட்டணத்தைச் செலுத்தி இப்போதே லிங்க் செய்திடுங்கள்.

 கடைசி நேர சர்வர் பிஸியாக இருக்க வாய்ப்புள்ளதால், கடைசி நிமிடம் வரை காத்திருக்காமல் இப்போதே இந்த வேலையை முடியுங்கள். உங்கள் பணத்தையும், நிம்மதியையும் காப்பாற்றிக்கொள்ள இதுவே கடைசி சான்ஸ்!

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram