வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் கொண்டு வந்த அரசு பொருளாதார வளர்ச்சி கட்டுப்படுத்தும் வகையில் அரசு ஏற்படுத்திய வரி மற்றும் செலவு மசோதா காரணமாக ட்ரம்புக்கும், எலான் மஸ்க்கும் இருந்த நட்பு உறவில் சற்று விரிசல் ஏற்பட்டது. அதன்படி, இருவரும் ஒருவரை ஒருவர் சமூக வலைதள பக்கங்களில் மோதலில் ஈடுபட்டு வந்தனர். அதில், நான் இல்லை என்றால் டிரம்பால் வெற்றி பெற்றிருக்க முடியாது. மேலும், அதிபர் பதவியை அடைந்திருக்க முடியாது என்றும் குற்றம் சாட்டியிருந்தார் எலான்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில், “எலான் ஒரு பைத்தியக்காரர். அவர் சுயநினைவை இழந்து விட்டார்,எனவே , அவரிடம் பேச எனக்கு விருப்பமில்லை” என்று டிரம்ப் கடுமையாக விமர்சித்தார். சில தினங்களுக்கு முன்பு தனி கட்சி ஒன்றை ஆரம்பிக்க போவதாக எலான் மஸ்க் தனது வலைதளப் பக்கத்தில் கருத்து கணிப்பு தகவலை வெளியிட்டிருந்தார்.
டிரம்ப் கொண்டு வந்த “பிக் பியூட்டிஃபுல் பில்” என்ற சட்ட மசோதாவால் இருவருக்கும் மோதல்கள் ஏற்பட்டது. மேலும், எலானின் டெஸ்லா கார் உற்பத்தி நிறுவனங்கள் மீது வரி அதிகரிப்பு குறித்து வெளியிட்டு இருந்தார். மேலும், சிறுமிகள் பாலியல் நெட்வொர்க்கில் டிரம்பின் பெயர் இடம் பெற்று இருப்பதாக எலான் மஸ்க் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குறித்த தனது கருத்துக்களுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக எலான் தெரிவித்துள்ளார். சென்ற வாரங்களில் அதிபர் டொனால்டு டிரம்ப் குறித்த எனது சில பதிவுகள் அத்துமீறி சென்று விட்டதாகவும், அதற்கு நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும், தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார் எலான் மஸ்க்.