மே 1ஆம் தேதி முதல் அமுலுக்கு வருகிறது!! ATM ல் அடிக்கடி பணம் எடுப்பவர்கள் நீங்கள் இதை கவனியுங்கள்!!

People who frequently withdraw money from ATMs

இந்தியாவில் இப்பொழுது உள்ள காலகட்டத்தில் டிஜிட்டல் முறையில்தான் பணம் செலுத்தும் வசதி அதிகரித்துள்ளது இருந்தபோதிலும் பல இடங்களில் பணம் தேவைப்படுகிறது அந்த பணத்தை எடுக்க நாம் வங்கிக்கு செல்லலாம் அல்லது ATM மூலம் பணம் எடுத்துக் கொள்ளலாம் ஆனால் ஏடிஎம் மூலம் பணம் எடுக்கும் ஒவ்வொருவருக்கும் இனி அதிகம் செலவாகும் மே 1 முதல் வங்கி வாடிக்கையாளர்கள்ATM இருந்து பணம் எடுக்க வேண்டும் என்று எண்ணினால் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் இரண்டு ரூபாய் அதிகம் செலுத்த வேண்டியதாக இருக்கும்.

ஏடிஎம்மில் இருந்து பணம் எடுப்பதற்கான கட்டணத்தை பரிவர்த்தனைக்கு 23 ரூபாயாக உயர்த்தி உள்ளது. வங்கிகளை ரிசர்வ் வங்கி அனுமதித்துள்ளது ஒவ்வொரு மாதமும் இலவசமாக பணம் எடுக்கும் வரம்பு முடிந்த பிறகு ATM இருந்து பணம் எடுப்பதற்கு இந்த கட்டணம் விதிக்கப்படும் வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கியின் ஏடிஎம்மில் இருந்து ஒவ்வொரு மாதமும் ஐந்து முறை இலவசமாக எடுத்துக்கொள்ளலாம்.

அதேபோன்று வாடிக்கையாளர்கள் மற்ற வங்கி ஏடிஎம்மில் இருந்து ஒரு குறிப்பிட்ட அளவு தான் இலவசமாக எடுக்க முடியும். பெரு நகரங்களில் மூன்று முறை இலவச பரிவர்த்தனைகளையும் மற்ற இடங்களில் ஐந்து முறை இலவச பரிவர்த்தனைகளையும் செய்து கொள்ளலாம் இதைவிட அதிகமாக பண பரிவர்த்தனை செய்வதை தவிர ஒரு பரிவர்த்தனைக்கு வாடிக்கையாளர்கள் இடமிருந்து அதிகபட்சம் ரூபாய் 23 கட்டணம் வசூலிக்கப்படலாம் என்றும் இந்த மாற்றம் மே 1 முதல் அமலுக்கு வருகிறது என்றும் டிஜிட்டல் முறையில் ஏடிஎம் பரிமாற்ற கட்டணம் ஏடிஎம் நெட்வொர்க்கால் தீர்மானிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.

அனைத்து மையங்களிலும் நிதி பரிவர்த்தனைகளுக்கான தற்போதைய பரிமாற்ற கட்டணம் ஒரு பரிவர்த்தனைக்கு ரூபாய் 19 மற்றும் நிதி அல்லாத பரிவர்த்தனைக்கு 23 ஆகும் ரிசர்வ் வங்கியின் அறிக்கை அனைத்து வங்கிகளும் பொருந்தும் அதாவது கணக்கு வைத்திருக்கும் வங்கி ஏடிஎம்மில் இல்லாமல் வேறு வங்கியின் ஏடிஎம்மில் பணம் எடுத்தால் மாதத்தில் முதல் மூன்று முறை மட்டுமே இலவசமாக எடுக்க முடியும் நான்காவது முறை எடுத்தால் ரூபாய் 19 பிடித்தம் செய்யப்படும் அதேபோன்று வங்கி கணக்கு வைத்திருக்கும் ஏடிஎம் லையே ஐந்து முறை மட்டும் இலவசமாக பணம் எடுக்கலாம் ஆறாவது முறை பணம் எடுத்தால் ரூபாய் 23 பிடிக்கப்படும் என்று அறிவித்துள்ளது

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram