கராச்சி: பாகிஸ்தானில் திடீரென்று ஏற்பட்ட ஆற்று வெள்ளத்தில் சுற்றுலாவிற்கு வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 18 பேரை அடித்து செல்லப்பட்டது. கைபர்– பக்துன்க்வா வாகனத்தில் வடக்கு பகுதியில் ஸ்வாட் நதி உள்ளது. பாகிஸ்தானின் வற்றாத ஜீவநதி என்று அழைக்கப்படுகிறது. வற்றாத ஜீவ நதியில் குளிப்பதற்காக ஒரே குடும்பத்தை சேர்ந்த 18 பேர் வந்துள்ளனர். பாகிஸ்தானில் கனமழை காரணமாக திடீரென்று ஸ்வாட் ஆற்றின் வெள்ளம் ஏற்பட்டது. வெள்ளம் வந்தது அறிந்து ஆற்றை விட்டு வெளியேறுவதற்கு முயற்சிப்பதற்க்குள் அவர்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
கரைக்குச் செல்ல முடியாமல் நடுப்பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 18 பேரும் சிக்கி கொண்டனர். வெள்ளப்பெருக்கு அதிகரிக்க அதிகரிக்க 18 பேரையும் அடித்து செல்லப்பட்டது. வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்டவர்கள் குறித்து மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த மீட்பு படையினர் ஆற்றின் அணைத்து இடங்களில் தவறுகளை தேடி வந்தனர்.
இதுவரை 9 பேரில் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன எனவும், அதில் மூன்று பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர் என்றும், மற்றவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது எனவும், மீட்பு படை அதிகாரி ஒருவர் கூறினார். கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயத்தில் ஆற்றில் குளிக்கவும், மீன்பிடிக்கவும் உள்ளூர் நிர்வாகம் தடை செய்யப்பட்டிருந்தது. இதில் குளிப்பதற்காக துரதிஷ்டவசமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 18 பேர் அடித்து செல்லப்பட்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், வெள்ளப்பெருக்கு அதிகமாக இருப்பதால் மீட்பு பணிகளில் சிரமம் ஏற்பட்டுள்ளது என்றும் கூறினார். சுற்றுலாவிற்கு வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 18 பேரில் வெள்ளப்பெருக்கு அடித்து செல்லப்பட்ட சம்பவம் மற்றும் அதன் பலியானவர்கள் குறித்து தகவல்கள் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

