குஜராத்தில் விமானம்  விபத்து !! அகமதாபாத் குடியிருப்பு பகுதியில் நடந்த கோர சம்பவம்!!

Plane crash in Gujarat!
காந்திநகர் : லண்டன் சென்ற ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளாகியது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து இன்று மதியம் லண்டனுக்கு புறப்பட்டு சென்ற ஏர் இந்தியா பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானது. அகமதாபாத் விமான நிலையத்திற்கு அருகே உள்ள குடியிருப்பு பகுதிகளில் விமானம் கட்டுப்பாட்டை இழந்து தீப்பற்றி விழுந்து நொறுங்கியது.
விமானத்தை இயக்கியவர் கேப்டன் ஸ்மித் சபர்வால் மற்றும் துணை விமானி கிளைவ் குந்தர் போன்ற அனுபவம் வாய்ந்த ஓட்டிகளை வைத்து இயக்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.  பயணத்தின் போது விமானத்தில் சுமார் 242 பயணிகள் பயணித்ததாக கூறப்படுகிறது. புறப்பட்டு சென்ற சிறிது வினாடிகளிலேயே தீப்பற்றி குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியதால் அந்த இடம் முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், தகவல் கிடைத்தவுடன் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
விமான விபத்து குறித்து காவல்துறை ஆணையர் மற்றும் முதல் மந்திரி உள்துறை மந்திரி போன்றோரும் மீட்பு பணிகளுக்கு தேவையான உதவிகளை வழங்குவதாக உறுதியளித்துள்ளனர். தேசிய பேரிடர் மீட்பு படை சேர்ந்த 90 பணியாளர்களை தேசிய பேரிடர் மீட்பு படை NDRF குழு காந்தி நகருக்கு சென்றுள்ளது.
பிரதமர் மோடி போக்குவரத்து துறை மந்திரிக்கு அழைத்து விமான விபத்து குறித்து விசாரித்தார். மேலும், சம்பவ இடத்திற்கு பார்வையிட புறப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார். ஏர் இந்தியா 171 என்ற விமானம் மதியம் 1.38 மணிக்கு அகமதாபாத் லண்டன் காட்டேஜ் வழித்தடத்தில் சென்ற போது விபத்துக்குள்ளானது.
இது குறித்த தகவல்களை எக்ஸ் தளத்தில் வெளியிடுகிறோம் என்று ஏர் இந்தியா தகவல்கள் வெளியிட்டது. 242 பயணிகளில் 169 பேர் இந்தியர்கள் என்றும், மற்ற பயணிகள் வெளிநாட்டினர் என்றும் குறிப்பிட்டிருந்தது. பயணிகளின் விவரங்கள் தெரியவில்லை . புறப்பட்ட சில நிமிடங்களில் மெக்நானிக் பகுதியில் நொறுங்கி விழுந்துள்ளது. இது தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram