சமீப காலமாகவே பாமக தலைவர் அன்புமணிக்கும் அவரது தந்தையாகிய ராமதாசுக்கும் கட்சி சண்டை நடந்து வருகிறது. ராமதாஸ் தலைமை நிர்வாக பொறுப்பில் அந்த கட்சியை வழிநடத்துகிறார். சமீபத்தில் அவர் அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து எடுத்து விட்டார். அதைத் தொடர்ந்து சில நாட்களாகவே அவர்களிடையில் உள்ள பிரச்சனை வெட்ட வெளியாக பேசும் பொருளாக மாறி இருந்தது. ராமதாஸ் சில நிர்வாகிக்ளையும் பொறுப்பில் இருந்து விலக்கி இருந்தார்.
அவர்களுக்கு பதிலாக புதிய நிர்வாகிகள் நியமிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றார். அப்போது அன்புமணி பழைய நீக்கப்பட்ட நிர்வாகிகள் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் இவ்விருவருக்கும் இடையேயான மோதல் கட்சித் தொண்டர்களை அழக்கடிக்க செய்கின்றது. தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ள ராமதாஸ் அன்புமணியை தனியே கட்சியை ஆரம்பிக்க சொன்னதாக கூறியுள்ளார். ஆனால், அன்புமணி சமீபமாக சில மாவட்டங்களில் பொதுக்குழு கூட்டம் நடத்தி வருகிறார்.
இன்று தர்மபுரி, சேலம் ஆகிய பகுதிகளில் கூட்டம் நடத்த இருக்கிறார். இந்நிலையில் பாமக முக்கிய புள்ளிகளான அமைச்சர்கள், அன்புமணி கூட்டத்தில் கலந்து கொண்டார் ராமதாஸ் திட்டுவார் என்று பயந்து கொண்டு இருக்கிற இடம் தெரியாமல் இருந்து விட்டு போகணும் என்று முடிவெடுத்துள்ளனர். அவர்கள் தாமாக மருத்துவமனையில் நெஞ்சுவலி என்று கூறி அட்மிட் ஆகி உள்ளனர். ஏனென்றால், அன்புமணியையும் பகைத்துக் கொள்ள முடியாது அல்லவா! குடும்பப் பிரச்சினையை அரசியலில் கொண்டு வந்து இப்படி தொண்டர்களை அளக்கடிக்க வைக்கிறார்களே! என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் சில கட்சி உறுப்பினர்கள் இதற்குப் பின்னால் யாரோ ஒருவர் சூழ்ச்சி செய்கிறார் என்று கூறி குழம்பி வருகின்றனர்.