சென்னை: நடிகை ஒருவர் சீமான் மீது பாலியல் குற்றச்சாட்டை வைத்துள்ளார். அதன்பின்பு நீதிபதிகள் அவரை நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார். நிலையில் அவர் சொன்ன நேரத்தில் ஆஜராக காரணத்தினால் அவர் வீட்டுக்கு சம்மன் அனுப்பப்பட்டது அப்பொழுதும் அவர் சரியான பதில் அளிக்காத காரணத்தால். அவர் வீட்டுக்கு நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இதனால் தான் சீமான் வீட்டில் சலசலப்பு ஏற்பட்டது. தற்போது நீலாங்கரை காவல் ஆய்வாளராக இருக்கும் பிரவீன் ராஜேஷ் என்பவர் பணியாற்றி வருகிறார். இவரின் தந்தை முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி வெடிகுண்டு சம்பவத்தில் இவரும் உயிரிழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது .தன் தந்தை இறந்த திட்டத்தினால் நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும் நோக்கத்தில் பணிக்கு வந்தவர்.
நீலாங்கரையில் சட்டை ஒழுங்கை கட்டுக்குள் வைத்திருக்கும் ஒரு நேர்மையான காவல் அதிகாரி ஆவார். இந்த நிலையில் அவருக்கு கீழ் வேலை பார்க்கும் ஒரு காவல் அதிகாரி சீமான் வீட்டிற்கு சம்மன் கொண்டு ஒட்டச் சென்றுள்ளார். அப்போது சீமான் வீட்டுக்கு பாதுகாவலராக செயல்பட்டு வந்தவர் போலீஸ் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் .மேலும் அந்த சம்மனை பாதுகாவலர் கிழித்து எறிந்தார். இதனால் இருவருக்கிடையே சலசலப்பு ஏற்பட்டது. அந்த வீட்டின் காவலாளியான சுதாகர் மற்றும் அமல்ராஜ் இருவரும் துப்பாக்கி கொண்டு காவல் அதிகாரியை மிரட்டி உள்ளனர்.
பின்பு அந்த காவல்துறை அதிகாரி பிரவீன் ராஜேஷ் என்ற காவல் ஆய்வாளருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடந்தவற்றை கூறியுள்ளார். காவல் ஆய்வாளர் பிரவீன் ராஜேஷ் மேலதிகாரிகளுக்கு தகவலை தெரிவித்து விட்டு நீலாங்கரையில் உள்ள சீமான் வீடு மேலதிகாரிகளுக்கு தகவலை தெரிவித்து விட்டு நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டிற்கு புறப்பட்டு சென்றார். மேலும் காவல் அதிகாரியை தரை குறைவாக நடத்திய பாதுகாவலர்களை குண்டுக்கட்டாக கைது செய்தார். மேலும் அவர்கள் பயன்படுத்தி துப்பாக்கி பறிமுதல் செய்தார் மற்றும் அந்த துப்பாக்கியிலிருந்து 20 குண்டுகளையும் பறிமுதல் செய்தனர். இந்த நிலையில் சீமான் ஓசூரில் செய்தியாளர்கள் சந்திப்பில் நான் ஏற்கனவே நீதிமன்றத்தில் ஆஜராகிரேன் என்று கூறிவிட்டேன் .
இன்று எதற்கு சமம் அனுப்ப வேண்டும் நான் இனிமேல் ஆதார் ஆக மாட்டேன் உங்களால் என்ன பண்ண முடியுமோ பண்ணிக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். மேலும் பாலியல் குற்றங்களில் சம்மன் அனுப்பிவிட்டால் சம்பந்தப்பட்ட குற்றம் சாட்டப்பட்ட அந்த நபர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். மேலும் தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகள் என் மீது உள்நோக்கத்துடன் குற்றம் சாட்டுகின்றனர் என்று சீமான் கூறினார். மேலும் சம்பவத்தை கேள்விப்பட்ட நாம் தமிழர் கட்சியின் அனைவரும் சீமான் வீட்டின் முன்பு அணிதிரண்டனர். மேலும் காவலர்களை சீமான் வீட்டின் முன்பு குவிக்கப்பட்டனர். நாம் தமிழர் தொண்டர்கள் சீமான் வீட்டிற்குள் அனுமதிக்குமாறு காவல்துறையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் சீமான் வீட்டு பாதுகாவலர்கள் முன்னாள் ராணுவ வீரர்கள் என்பது குறிப்பிடப்பட்டது.