மயிலாடுதுறை: பணியில் இருந்த பெண் பாதுகாவலர் கையில் வைத்திருந்த துப்பாக்கியை வைத்து தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த இந்த சம்பவம் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. நாகை ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் கருவூல அலுவலகத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன.
இதில் மயிலாடுதுறை மாவட்டம் மணங்குடி பகுதியை சேர்ந்த அபிநயா என்பவர் ஆயுதப்படை காவலராக பணிபுரிந்து வருகிறார். இதனிடையே மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கருவூல அலுவலக பாதுகாப்பு பணியில் நேற்று இரவு முதல் பணியில் ஈடுபட்டுள்ளார் இன்று காலை அபிநயாவுக்கு மாற்றாக மற்றொரு பெண் காவலர் பணிக்கு வந்தபோது அபிநயாவை காணவில்லை.
இதனால் சுற்றி பார்த்தவர் ஆயுதப்படைப்பு தகவல் தெரிவித்து தேடிய போது ஒரு அறை மட்டும் உள்பக்கமாக தாழ் போட்டிருந்ததை பார்த்துள்ளனர் தொடர்ந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது துப்பாக்கி கொண்டு தொலைத்து ரத்த வெள்ளத்தில் சடங்கு கடந்துள்ளார் அபிநயா தகவல் அறிந்த சமூக இடத்திற்கு சென்ற நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருள் கபிலன் விசாரணை நடத்தினார் அபிநயா தான் பாதுகாப்பிற்காக வைத்திருந்த ஐ எம் எஸ் ஏ எஸ் 5.56 எம் எம் ரகு துப்பாக்கியால் சுட்டுக் கொண்டதில் அவரது வலது கழுத்தில் பாய்ந்த குண்டு இடது காதுக்கு மேல் வெளியேறியது தெரியவந்தது.
தொடர்ந்து அபிநயாவின் சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கான தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர் மன உளைச்சலில் இருந்த அபிநயா மருத்துவ விடுப்பில் சென்ற நிலையில் ஐந்து நாட்களுக்கு முன்பு தான் மீண்டும் பணிக்கு சென்றுள்ளார். தான் நேசித்த காவலர் பணி. பணிசுமை காரணமாக உயிரை மாய்த்துக் கொண்டு இருக்கலாம் என காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.