தொட முயன்றார் அறைந்துவிட்டேன்!! கேரவனில் நடந்த பகீர் சம்பவம்..  பூஜா ஹெக்டே ஓபன் டாக்!!

Pooja Hegde Interview, Pan India Hero, Tollywood Controversy.

சென்னை: தென்னிந்தியத் திரையுலகம் மற்றும் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் பூஜா ஹெக்டே, சமீபத்திய நேர்காணல் ஒன்றில் திரையுலகையே அதிர வைக்கும் ஒரு ரகசியத்தைப் பகிர்ந்துள்ளார். படப்பிடிப்புத் தளங்களில் நடிகைகளுக்கு நடக்கும் அத்துமீறல்கள் குறித்து அவர் பேசியிருப்பது தற்போது விவாதப் பொருளாகியுள்ளது.

அனுமதியின்றி நுழைந்த ஹீரோ: “சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெரிய பட்ஜெட் ‘பான்-இந்தியா’ படத்தில் நான் நடித்துக்கொண்டிருந்தேன். அப்போது என்னுடன் நடித்த அந்த நட்சத்திர ஹீரோ, நான் கேரவனில் இருந்தபோது அனுமதியின்றி உள்ளே நுழைந்தார்.”

அத்துமீறல்: “அவர் என்னிடம் அநாகரீகமாக நடக்க முயன்றதுடன், அனுமதியின்றி என்னைத் தொட முயன்றார். அந்தத் தருணத்தில் நான் சற்றும் யோசிக்காமல் அவரை ஓங்கி அறைந்துவிட்டேன்” எனப் பூஜா தெரிவித்துள்ளார்.

தொடரும் புறக்கணிப்பு: அந்தச் சம்பவத்திற்குப் பிறகு, அந்த ஹீரோ மீண்டும் அவருடன் இணைந்து நடிக்க மறுத்துவிட்டதாகவும், ஒரு பெரிய வாய்ப்பைத் தான் இழந்ததாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

யார் அந்த ஹீரோ? பூஜா ஹெக்டே அந்த ஹீரோவின் பெயரை வெளிப்படையாகச் சொல்லவில்லை என்றாலும், அவர் நடித்த ‘ராதே ஷ்யாம்’, ‘பீஸ்ட்’, ‘ஆச்சார்யா’ அல்லது பாலிவுட் படங்களின் ஹீரோக்களாக இருக்குமோ என நெட்டிசன்கள் இப்போதே “கெஸ்” (Guess) பண்ண ஆரம்பிச்சுட்டாங்க.

துணிச்சலுக்குப் பாராட்டு: திரையுலகில் செல்வாக்கு மிக்க ஒரு ஹீரோவை எதிர்த்துப் பூஜா ஹெக்டே காட்டிய இந்தத் துணிச்சலுக்குப் பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். ‘மீ டூ’ (Me Too) இயக்கத்தின் ஒரு பகுதியாக இது பார்க்கப்படுகிறது.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram