சென்னை: தமிழக வெற்றிக் கழகம், அதிமுக-பாஜக கூட்டணி எனத் தமிழக அரசியல் களம் 2026 தேர்தலுக்காக இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்ட நிலையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தனது கட்சியின் நிலைப்பாடு குறித்து உருக்கமான கருத்தைப் பகிர்ந்துள்ளார்.
தாய்மை உணர்வு: “கேப்டன் வளர்த்தெடுத்த தேமுதிக எங்களுக்கு ஒரு குழந்தை போன்றது. ஒரு தாயாக அந்தக் குழந்தையைச் சரியான பாதையில் கொண்டு செல்ல வேண்டிய கடமையும், பொறுப்பும் எனக்கு அதிகமாக உள்ளது. அந்தக் குழந்தைக்கு எது நல்லது என்பதை உணர்ந்து நான் செயல்படுவேன்.”
யாரையும் கன்பியூஸ் பண்ணாதீங்க: “கூட்டணி தொடர்பாகத் தினமும் ஏதோ ஒரு செய்தியை வெளியிட்டுத் தொண்டர்களைக் குழப்ப வேண்டாம். ஒரு முடிவு எடுத்தால் அதை நானே நேரில் வந்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பேன். இப்போது வரை கட்சியைப் பலப்படுத்தும் பணிகளில்தான் கவனம் செலுத்தி வருகிறோம்.”
உரிய நேரத்தில் அதிரடி: “உரிய நேரத்தில் எல்லோரும் பாராட்டக்கூடிய, தேமுதிக-விற்கு நலம் தரக்கூடிய ஒரு மெகா கூட்டணியை அமைப்போம். அந்தப் கூட்டணி மக்கள் விரும்பும் மாற்றத்தைக் கொண்டு வரும்” எனத் தெரிவித்தார்.
தேமுதிக-வின் எதிர்பார்ப்பு: ஏற்கனவே மதுரையில் நடந்த கூட்டத்தில், “2026 அமைச்சரவையில் தேமுதிக நிச்சயம் இடம் பிடிக்கும்” எனப் பிரேமலதா பேசியிருந்தார். இதன் மூலம், வெறும் ‘சீட்’ (Seats) மட்டும் முக்கியமல்ல, ‘ஆட்சியில் பங்கு’ (Power Sharing) என்பதுதான் தேமுதிக-வின் இப்போதைய பிரதான கோரிக்கையாகப் பார்க்கப்படுகிறது.


