தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை எச்சரிக்கை!! ஆரஞ்சு அலர்ட் மாவட்டங்களின் லிஸ்ட்!! 

Rain warning in various districts of Tamil Nadu
கோவை :  வடமேற்கு வங்கக்கடலில் காற்றளவுக்கு தாழ்வு நிலை நிலவுவதால் நீலகிரி, கோவை உள்ளிட்ட தமிழக மாவட்டங்களில் இன்றும் நாளையும் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி திருநெல்வேலி திண்டுக்கல் திருப்பூர் தேனி தென்காசி மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இன்று கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுவதால் பரவலாக மழை பெய்து வருகிறது. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு திசையில் நகர்ந்து இன்று (புதன்கிழமை) அல்லது நாளை (வியாழக்கிழமை) தற்போது காணப்படுவதை விட வலுவடைய கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் சார்பில் அறிவித்துள்ளது.
கனமழைக்கு வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:
தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலெடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தின் சில இடங்களில் மழை நீடிக்கும் என்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் கனமழை தொடரும் என்றும் தெரிவித்து பட்டு இருக்கிறது. இன்று தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை கோவை மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தின் சில பகுதிகளில்  கன அல்லது மிக கன ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆரஞ்சு எச்சரிக்கை மாவட்டங்கள்:
நெல்லை, தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மஞ்சள் எச்சரிக்கை மாவட்டங்கள்:
கன்னியாகுமரி, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மீன் பிடிப்பதற்கான எச்சரிக்கை:
வரும் 31ஆம் தேதி வரை தமிழக கடலோரப் பகுதிகள் குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் தெற்கு வங்கக்கடலின் அநேக பகுதிகள் போன்ற இடங்களில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வரை வேகத்தில் வீசக்கூடும். இதனால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.
மற்ற மாநிலங்களின் மழை நிலவரம்:
வங்கக் கடலில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது இருப்பதால் தென்மேற்கு பருவமழை கேரளா மற்றும் கடற்கரையோர கர்நாடக பகுதிகளில் இந்நிலை தீவிரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய மகாராஷ்டிரா கர்நாடக மாவட்டங்கள் மற்றும் கோவை பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram