சொந்த வீட்டில் பிறந்து வளர்ந்த நான் இப்போ வாடகை வீட்டில்!! ரவி மோகனின் மனக்குமுறல்!!

சமீபத்தில் 3 பிஹெச் கே திரைப்பட ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்று இருந்தது. அந்தத் திரைப்படத்தில் நடிகர் சித்தார்த், தேவயானி, சரத்குமார் மற்றும் சிலர் நடித்துள்ளனர். அந்நிகழ்ச்சியில் திரைப்பட குழு மற்றும் இயக்குனர் ராம், மாரி செல்வராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டு உள்ளனர். இந்தத் திரைப்படம் குறித்தும், நடிகர் சித்தார்த்துடனான உறவு குறித்தும் ராம் மிக எதார்த்தமாக பேசியிருந்தார்.

அந்த நிகழ்ச்சியில் நடிகர் ரவி மோகனும் கலந்து கொண்டுள்ளார். அவர் மேடையில் பேசியது பின்வருமாறு, நான் பிறந்தது முதல் வளர்ந்து சில காலங்கள் முன் வரை சொந்த வீட்டில் தான் இருந்தேன். இப்பொழுது வாடகை வீட்டில் உள்ளேன் என்று கூறிவிட்டு, இந்தப் படம் பார்த்துவிட்டு எனக்கு பெரிய இன்ஸ்பிரேஷன் ஆக உள்ளது. மேலும் இதில் என் வாழ்வில் நடைபெற்றுள்ள ரிலேட்டிவ் சீன்ஸ் நிறையாக அடங்கி உள்ளது. ஒரு படம் அந்த இன்ஸ்பிரேஷனை கொடுத்தாலே போதுமானது. இது நிறைய பேர் வாழ்க்கையில் அடுத்த கட்ட நகர்வை முன்னெடுத்து வைப்பதற்கு வழிவகுக்கும் என்று தெரிவித்திருந்தார். மேலும் அங்குள்ள நபர்களிடம் உள்ள சுவாரசிய விஷயங்களை எடுத்துக் கூறி வேற யாராவது மறந்திருந்தேனால் சாரி என்றும் பணிவோடு கேட்டிருந்தார். சித்தார்த் உடனான அவரது நட்பு மேடைப் பேச்சிலையே மிக அழகாக தெரிந்திருந்தது.

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Get free tips and resources right in your inbox, along with 10,000+ others

Latest Post

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram