Ee Sala Cup Namde!! இது வெறும் வெற்றி அல்ல வரலாறு.. மகிழ்ச்சி வெள்ளத்தில் RCB ரசிகர்கள்!!

RCB fans are in a state of joy

18 வருடமாக தேடித் தேடித் திரிந்த அந்த ஒரே ஒரு கனவு – ஐபிஎல் கோப்பை! பல முறை வாய்ப்புகள் வந்தும், அதற்கும் மேல் திறமையுள்ள வீரர்கள் இருந்தும், RCB அணி அதை ஜெயிக்க முடியாமல், ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்து வந்தனர்.ஆனால், 2025 இந்த வருடம் வெறுமனே ஒரு ஆண்டு அல்ல, இது ஒரு வரலாறு. RCB ஜெர்சியின் பின் இருந்த அந்த 18 என்ற எண், இந்த வருடத்தில் ஒரு அதிசயமாக மாறியது. கோப்பையை வெல்லும் கனவை நனவாக்க, வீரர்கள் ஒவ்வொருவரும் தங்களின் எல்லைகளை மீறி போராடினர்.

முன்னோடி “இந்த ஐபிஎல் கோப்பையை விராட் கோலிக்காக வென்று தரவேண்டும்” என்ற கேப்டன் ராஜத் பட்டிதாரின் வார்த்தைகள் தான். பஞ்சாப் கிங்ஸுடன் நடந்த இறுதிச்சுற்று போட்டி, ஒரு சாதாரண கிரிக்கெட் போட்டி அல்ல, அது ஒரு உணர்ச்சி வெடிப்பு. மும்பையை வீழ்த்திய பஞ்சாப் பக்கத்தில் இந்தியா முழுவதும் பலர் ஆதரவு தந்தபோதும், விராட் கோலிக்கும், RCBக்கும் உறுதியான நம்பிக்கையாக இருந்தது அதன் உண்மையான ரசிகர்கள் மட்டுமே.

18 வருடங்களாக கடந்து வந்த பாதை இளம் வீரர்களின் உற்சாகமும், கோலியின் அனுபவமும், கேப்டனின் தெளிவான தன்னம்பிக்கையும் சேர்ந்து இந்த வெற்றியை சாத்தியமாக்கின.

அந்த 2011 உலகக்கோப்பை போலவே, ஒருவருக்காக ஒரு அணி தனது எல்லைகளை தாண்டி வெற்றி பெற்றது. அப்போது சச்சினுக்காக, இப்போது விராட் கோலி-க்காக. RCB ரசிகர்களின் கண்களில் தண்ணீர், ஆனால் அந்த தண்ணீர் துக்கத்தில் இல்லை சந்தோஷத்தில் வரக்கூடிய ஆனந்த கண்ணீர் “Ee Sala Cup Namde” என்ற கனவு, இப்போது ஓர் உண்மை.

இது வெறும் ஒரு கோப்பை அல்ல, இது 2025 ஆம் ஆண்டு வெற்றி வரலாறு. RCB வெற்றியுடன், இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் இதயமும் இன்று வென்றுவிட்டது. ரசிகர்கள் “Ee Sala Cup Namde” என ஆடிப்பாடி கொண்டாடி வருகின்றனர்

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram