பல பெண்களுடன் தொடர்பில் உள்ள RCB வீரர்!! உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவு!! யார் அந்த வீரர்??

RCB player in a relationship with multiple women

RCB அணி மற்றும் இந்திய அணியின் பேக் பந்துவீச்சாளர் தான் யஷ் தயாள் அவர் மீது தற்போது பெண் ஒருவர் புகார் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கடந்தாண்டு ஐபிஎல் லில் யஷ் தயால் குஜராத் அணிக்காக பந்து வீசிய போது ரிங்கு சிங் அந்த ஓவரில் 5 சிக்ஸ் அடித்து போட்டியை முடித்து வைத்தார். அதன் பின் எஸ் தயால் மிகவும் விமர்சனத்திற்கு உள்ளானார். பின் பெங்களூர் அணியில் இடம் பெற்று சிறப்பான பந்துவீச்சினை வெளிப்படுத்தி வந்தார். இந்நிலையில் அவர் மீது பெண் ஒருவர் புகார் அளித்துள்ளது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

உத்திரபிரதேச மாநில முதல்வரின் இணைய வழி புகார் மையத்தில் தான் அந்தப் பெண் தன்னுடைய புகாரை பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டுமல்லாமல் அவர் அளித்த அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கும்படி காசியாபாத் காவல் நிலையத்திற்கு முதல்வர் அலுவலகத்தில் இருந்து உத்தரவு வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அந்தப் பெண் அடுத்துள்ள புகாரில் யார் தயாளுடன் 5 ஆண்டுகள் உறவில் இருந்துள்ளதாகவும் அவர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக மனதளவிலும் உடலளவிலும் பயன்படுத்திக் கொண்டு ஏமாற்றி விட்டார் எனவும், அந்த புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் அவர் அவருடைய குடும்பத்தினருடன் தன்னை அறிமுகம் செய்து ஒரு கணவர் போல நடந்து கொண்டார். அதனால் அவரை முழுவதுமாக நம்பியுள்ளதாக கூறியுள்ளார். அது மட்டும் இல்லாமல் நிதியளவிலும் தன்னை அவர் பயன்படுத்திக் கொண்டதாக கூறியுள்ளார். மேலும் அவர் என்னைப் போலவே பல பெண்களுடன் தவறான உறவில் இருந்ததாக கூறி அவர் மீது புகார் அளித்துள்ளார் இருவர் சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் வீடியோ பதிவுகள் தன்னிடம் இருப்பதாக கூறியுள்ளார்.

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram