டாக்கா: வங்கதேசத்தில் இடைக்கால அரசு ஆட்சி நடைபெற்று வந்த நிலையில் யூனிஸ் ராஜினாமா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அதன்படி வங்கதேசத்தில் ஏற்பட்டு மாணவர்கள் போராட்டத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா அவரது பதவியை ராஜினாமா செய்தார். அதைத்தொடர்ந்து முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்துள்ளது. ஆரம்பத்தில் இந்த இடைக்கால அரசுக்கு ராணுவ தளபதி வாக்கு ஜாமன் ஆதரவு தெரிவித்து உள்ளார்.
தேசிய பாதுகாப்பு ஆலோசகரை யூனிஸ் ராணுவ தளபதியிடம் கலந்து ஆலோசனை செய்யாமல் நியமித்துள்ளார். இதன் காரணமாக இருதரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. மேலும் பொதுத் தேர்தலை உடனடியாக அறிவிக்க வேண்டும் என யூனுசுக்கு ராணுவ தளபதி ஜாமன் நெருக்கடி கொடுத்து வருகிறார். பெரும்பாலான ராணுவ தளபதிகள் தேர்தல் நடத்த வேண்டும் என ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது பிரதமர் யூனிவர்சுக்கு மேலும் பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
ராணுவ தளபதியுடன் மோதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் வங்கதேசத்தில் இடைக்கால அரசு ஆட்சி அமைத்து வந்துள்ள நிலையில் முகமது யூனுஸ் ஆட்சி செய்து வந்தது. இந்நிலையில் ராணுவ தளபதி ஜாமின் கொடுக்கும் நெருக்கடியில் முகமது யூனிஸ் ராஜினாமா செய்யப் போவதாக முடிவு செய்துள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. மாணவர்கள் தலைமையிலான தேசிய குடிமக்கள் கட்சித் தலைவர் நித் இஸ்லாம் கூறியதாவது, முகமது யூனுஸ் ராஜினாமா முடிவு பற்றிய செய்திகள் கேட்டேன்.
அவரை உடனே சந்தித்து ஆலோசனை நடத்தினேன். அவர் ராஜினாமா செய்வது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார் என தெரிவித்தார். ராணுவ நெருக்கடி போன்ற சூழலில் பணியாற்றுவது கடினம் என்று முகமது யூனிஸ் நினைப்பதாகவும் அவர் கூறியிருந்தார். மேலும் முகமது யூனிஸ் உடன் இணைந்து ஒவ்வொருவரும் பணியாற்றுவார்கள் என்று நம்புவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.