Dhubai: கடந்த மாதம் அமெரிக்காவில் வெள்ளை மாளிகையில் நடந்த உக்கிரன் ரஷ்யா போர் நிறுத்த ஒப்பந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இருவருக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது . அது வாக்குவாதத்தில் போய் முடிந்தது மேலும் அமெரிக்கா அதிபர் ஜெலன்ஸ்சி நீங்கள் ஒரு சர்வாதிகாரி என்றும் காட்டமாக கூறினார். இதனால் கோபம் அடைந்த உக்கிரன் அதிபர் வெள்ளை மாளிகை விட்டு வெளியேறினார். அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவுற்றது. செய்தியாளர்கள் சந்திப்பில் அமெரிக்க அதிபர் கூறியதாவது உக்கிரன் மக்களின் நலனில் ஜெலன்ஸ்கி எந்த அக்கறையும் இல்லை. நாட்டின் மீதும் எந்த கவலையம் இல்லை. அவர் ஒரு சுயநலவாதி மற்றும் அதிபர் பதிவில் இருக்கும் கோமாளி என்று கூறினார். மேலும் அமெரிக்காவிலிருந்து உக்ரைனுக்கு கொடுக்கப்பட்ட அனைத்து நிதிகளும் நிறுத்தப்படுகிறது என்று வெள்ளை மாளிகை வெளியிட்டது. இதன் காரணமாக உக்கிரனில் உள்ள உயர்தர கனிம வளங்களை அமெரிக்கா எடுத்துக் கொள்ள அனுமதி தரப்படும் என்று உக்கிரன் அதிபர் கூறியுள்ளார். மேலும் போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு நான் தயாராக உள்ளது உள்ளேன் என்று கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று சவுதி அரேபியாவில் நடைபெற உள்ளது. அந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்கா வெளியுறவுத் துறை அமைச்சர் மார்க்கோ ருபியோ மற்றும் விளாடிமிர் ஜெலன்ஸ்கி இடையே இன்று பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது. உக்கரைன் ரஷ்யா போர் கடந்த 2022 ஆண்டிலிருந்து இன்று வரை போர் நடந்து வருகிறது. மேலும் இந்த போரினால் உக்கிரனுக்கு அதிக இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் உக்ரைன்க்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதங்களை கொடுத்து உதவியுள்ளது. மேலும் அமெரிக்கா ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்தனர். அமெரிக்காவுக்கு புதிதாக பதிவியேற்ற அதிபர் ரஷ்யா உடன் பரஸ்பர உறவு மேற்கொள்வதாக அறிய வெளியிட்டது. இதன் காரணமாக உக்கிரேனுக்கு கொடுத்து வந்த ராணுவ உபகரணங்கள் மற்றும் டாலர்களை அமெரிக்கா நிறுத்தியதன் காரணமாக இந்த போரினி கடந்து சமாளிக்க முடியாத காரணத்தினால் உக்கிரன் பேச்சுவார்த்தைக்கு உடன்படுவதாக உக்ரைன் அதிபர் தெரிவித்தார். இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை ரஷ்யாவுக்கு ஆதரவாக முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





