உக்ரைன் மீது ரஷ்யா அதிரடி தாக்குதல்!! நிறுத்தாவிட்டால் தொடரும்.. பதின் எச்சரிக்கை!!

ஜூன் 6-ம் தேதி அதிகாலை, உக்ரைன் தலைநகர் கியவ் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் ரஷ்யா நடத்திய ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதலால் பல்வேறு பகுதிகளில் தீவிரமான வெடிப்புகள், தீப்பற்றிய கட்டிடங்கள் மற்றும் மெட்ரோ பாதைகளில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. அதிகாரிகள் தெரிவித்ததின்படி, குறைந்தது நான்கு பேர் உயிரிழந்தனர், மேலும் 80-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு பின்னணி, உக்ரைன் கடந்த வாரம் “ஸ்பைடர்ஸ் வெப்” (Operation Spider’s Web) என்ற ரகசிய டிரோன் நடவடிக்கை ஆகும்.

இதில் ரஷ்யாவின் முக்கிய Tu-95 மற்றும் Tu-22M3 வகை ஸ்டிராடஜிக் பாம்பர் விமானங்கள் மற்றும் ராணுவ அமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாகவும், அந்த தாக்குதலில் பெரியளவு சேதம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் வகையில் ரஷ்யா இந்த ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களை நடத்தியதாக அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

இவர், “உக்ரைன் தீவிரவாத நடவடிக்கைகளை நிறுத்தாவிட்டால், இதுபோன்ற தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெறும்,” என்ற எச்சரிக்கை விடுத்துள்ளார். கியவ் நகரில் ஏற்பட்ட வெடிப்புகளால் பொதுமக்கள் இடையூறு மற்றும் பெரும் பயம் அடைந்துள்ளனர். நகரின் மைய பகுதியில் அவசர சேவைகள் முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றன.

சில பகுதிகளில் மின்சாரம், நீர், இணைய வசதிகள் போன்ற அத்தியாவசிய தேவைகள் தடை செய்யப்பட்டுள்ளன. இந்த தாக்குதல்கள், சமீபத்திய சமாதான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் இல்லாத நிலையை மேலும் தீவிரப்படுத்தி, இரு நாடுகளின் இடையிலான பதிலடி நடவடிக்கைகளை உச்சநிலையில் கொண்டு சென்றுள்ளன.

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram