நீலாங்கரை வீடு குறித்த புதிய மனு:
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து வழக்கு செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சங்கீதா தரப்பிலிருந்து தற்போது ஒரு புதிய இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், “விஜய் என்னை எங்களது நீலாங்கரை வீட்டிற்குள் அனுமதிக்க மறுக்கிறார். அந்த வீட்டில் வசிக்க எனக்கு முழு உரிமை உள்ளது. எனவே, வழக்கு விசாரணை முடியும் வரை நான் அங்கேயே தங்குவதற்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
பகீர் புகார்கள்:
விவாகரத்து கோரியுள்ள முதன்மை மனுவில், கடந்த 2021-ம் ஆண்டு முதல் விஜய் தன்னுடன் சரியாகப் பேசுவதில்லை என்றும், ஒரு நடிகையுடனான தொடர்பு காரணமாகத் தன்னைக் குடும்பத்திலிருந்து அந்நியப்படுத்தி வைத்திருப்பதாகவும் சங்கீதா குற்றம் சாட்டியுள்ளார். மேலும், தனக்கு நிதி ரீதியான கட்டுப்பாடுகளை (Financial Restrictions) விதித்துள்ளதாகவும், தனது நடமாட்டத்தைச் சுதந்திரமாக இருக்க விடுவதில்லை என்றும் அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார். 27 ஆண்டுகால திருமண வாழ்க்கையில் தற்போது ஏற்பட்டுள்ள இந்த விரிசல் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீதிமன்ற உத்தரவு:
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வரும் ஏப்ரல் 20, 2026 அன்று விஜய் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும், நீலாங்கரை வீட்டில் சங்கீதா தங்குவது மற்றும் அவருக்கு வழங்கப்பட வேண்டிய ஜீவனாம்சம் (Alimony) குறித்தும் அந்த தேதியில் விரிவான விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்யின் அரசியல் பயணம் சூடுபிடித்துள்ள நிலையில், அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் எழுந்துள்ள இந்தச் சிக்கல் பெரும் பேசுபொருளாகியுள்ளது.





