அன்னைக்கு மதிக்கல.. இன்னைக்கு தூக்க மாத்திரை!! தவெக தலைவர் விஜய்யை வறுத்தெடுத்த சரத்குமார்!!

Sarathkumar roasts Tvk leader Vijay

சென்னை: தமிழக அரசியலில் 2026 தேர்தலை இலக்காகக் கொண்டு களம் இறங்கியுள்ள நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’, கட்சிக்குள்ளேயே பல்வேறு சவால்களைச் சந்தித்து வருகிறது. சமீபத்தில் தவெக-வின் பெண் நிர்வாகி ஒருவர் கட்சித் தலைமை மீது அதிருப்தி அடைந்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து நடிகர் சரத்குமார் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

சரத்குமார் முன்வைத்த விமர்சனம்: செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், கட்சி நிர்வாகிகளுக்கும் தலைமைக்கும் இடையிலான இடைவெளி குறித்துப் பேசுகையில் விஜய்யைச் சாடினார். அவர் கூறுகையில், “விஜய் காரில் சென்றபோது ஒரு கட்சி பெண் நிர்வாகி அவரை மறித்து முறையிட்டார். அப்போதே அவர் காரை நிறுத்தி, அந்தப் பெண்மணியை மதித்து அவரிடம் என்ன பிரச்சனை என்று கேட்டிருந்தால், விஜய் ஒரு நிஜ ஹீரோவாகத் தெரிந்திருப்பார். ஆனால் அவர் அதைச் செய்யவில்லை” என்றார்.

தூக்க மாத்திரை விவகாரம்: தொடர்ந்து பேசிய அவர், “தலைமை தங்களை மதிக்கவில்லை என்ற வேதனையில்தான் அந்தப் பெண் நிர்வாகி தற்போது தூக்க மாத்திரை சாப்பிட்டுத் தற்கொலைக்கு முயன்றுள்ளார். விஜய் அன்றே அந்தப் பெண்ணின் கோரிக்கையைக் கேட்டிருந்தால், இன்று இந்தச் சூழல் உருவாகி இருக்காது. ஒரு தலைவன் என்பவன் கடைக்கோடி தொண்டனின் வலியையும் உணர வேண்டும்” என அறிவுரை கூறும் விதமாகப் பேசினார்.

தவெக-வில் நிலவும் அதிருப்தி: விஜய் கட்சி தொடங்கிய பிறகு, பழைய நிர்வாகிகள் ஓரம் கட்டப்படுவதாகவும், முக்கிய முடிவுகளில் தங்களுக்குப் பங்கு அளிக்கப்படுவதில்லை என்றும் மாவட்ட அளவில் பல புகார்கள் எழுந்து வருகின்றன. சரத்குமாரின் இந்த விமர்சனம், ஏற்கனவே அதிருப்தியில் இருக்கும் தவெக தொண்டர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram