நாடகம் போட்டு மக்களை ஏமாத்தாதீங்க!! ஓபிஎஸ்-ஐ வறுத்தெடுத்த செல்லூர் ராஜு!! அதிமுக அரசியலில் புதிய போர்!!

Sellur Raju attack on OPS AIADMK re-entry drama

அதிமுகவில் மீண்டும் இணைவது தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்து வரும் கருத்துகளுக்கு, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தனது பாணியில் காரசாரமான பதிலடியைக் கொடுத்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஓபிஎஸ்-ன் செயல்பாடுகளை ஒரு ‘திரைக்கதை’ எழுதப்பட்ட நாடகம் எனச் சாடினார். “அதிமுகவில் தன்னை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று ஓபிஎஸ் கேட்பதற்கு ஒரு முறை இருக்கிறது. அதைவிட்டுவிட்டு தினசரி ஊடகங்கள் வாயிலாகத்தான் கேட்க வேண்டுமா?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து ஓபிஎஸ்-ஐ விமர்சித்த செல்லூர் ராஜு, “அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராகவும், பல ஆண்டுகள் கட்சியில் முக்கியப் பதவிகளிலும் இருந்தவர் பன்னீர்செல்வம். அவருக்குக் கட்சித் தலைமையைத் தொடர்பு கொள்வது எப்படி என்று தெரியாதா?

முறையாகப் பேசாமல், பொதுவெளியில் பேட்டி கொடுத்துக் கொண்டிருப்பது வெறும் விளம்பரத்திற்காக மட்டுமே. இந்த நாடகங்களைப் பார்த்துத் தமிழக மக்கள் ஏற்கனவே சலிப்படைந்து விட்டார்கள்” என்று காட்டமாகத் தெரிவித்தார். அதிமுகவில் அவரை மீண்டும் இணைப்பதற்கான கதவுகள் எப்போதோ மூடப்பட்டுவிட்டன என்பதை அவர் தனது பேச்சின் மூலம் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தினார்.

மேலும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக கட்டுக்கோப்பாக இயங்கி வருவதாகவும், 2026 தேர்தலில் அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். “யாருடைய தயவும் இன்றி அதிமுக தனித்துப் போட்டியிடவும் தயாராக உள்ளது.

குழப்பம் விளைவிக்க நினைப்பவர்களின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது” என அவர் கூறினார். செல்லூர் ராஜுவின் இந்தத் திடீர் ஆக்ரோஷப் பேச்சு, ஓபிஎஸ் தரப்புக்கு ஒரு பெரிய பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. ஈபிஎஸ் – ஓபிஎஸ் அணிகள் இணைவதற்கான சிறு வாய்ப்பும் இனி இல்லை என்பதை இது ஆணித்தரமாக உணர்த்துகிறது.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram