திமுகவை தவிர யாரிடமும் பேசவில்லை!! தவெக கூட்டணி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த செல்வப்பெருந்தகை!!

selvaperunthagai-congress-dmk-alliance-clarification-power-sharing-rahul-gandhi-stalin

கூட்டணி திமுக-வுடன் தான் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த செல்வப்பெருந்தகை ஆனால் அதிகாரப் பகிர்வு மேலிடத்தின் கையில்

சென்னை: தமிழக வெற்றி கழகத்துடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கப் போவதாகப் பரவி வந்த செய்திகளுக்குத் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று அதிரடியாக விளக்கம் அளித்துள்ளார்.

ஒரே கூட்டணிதான்: செய்தியாளர்களிடம் பேசிய அவர், “காங்கிரஸ் கட்சி இப்போதும் திமுக தலைமையிலான கூட்டணியில்தான் அங்கம் வகிக்கிறது. திமுகவை தவிர வேறு எந்தக் கட்சியுடனும் நாங்கள் கூட்டணி குறித்துப் பேசவில்லை. ஊடகங்களில் வரும் செய்திகள் அனைத்தும் வெறும் வதந்திகளே” எனத் திட்டவட்டமாகக் கூறினார்.

அதிகாரப் பகிர்வு – டெல்லி மூவ்: இருப்பினும், 2026 தேர்தலில் காங்கிரஸ் ‘ஆட்சியில் பங்கு’ (Power Sharing) கேட்குமா என்ற கேள்விக்கு ராஜதந்திரமாகப் பதிலளித்த அவர், “அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து எங்கள் தலைவர் ராகுல் காந்தியும், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினும் நேரில் அமர்ந்து பேசி சுமுகமான முடிவை எடுப்பார்கள். அது மேலிடம் சம்பந்தப்பட்ட விஷயம்” எனத் தெரிவித்தார்.

அரசியல் கணக்கு: விஜய் தனது மாநாட்டில் “ஆட்சியில் பங்கு” என அறிவித்ததைத் தொடர்ந்து, திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸும் அதே கோரிக்கையை முன்வைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. செல்வப்பெருந்தகையின் இந்த நிதானமான பேச்சு, திமுக-வுக்கு ஒரு பக்கம் நிம்மதியைக் கொடுத்தாலும், “ராகுல் காந்தி – ஸ்டாலின்” பேச்சுவார்த்தையில் ‘அமைச்சர் பதவி’ போன்ற நிபந்தனைகள் வரக்கூடும் என்பதையே கோடிட்டுக் காட்டுகிறது

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram