கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா சம்மந்தப்பட்ட ‘மூடா’ என்னும் ஊழல் வழக்கு விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில் முதல்வர் சித்தராமய்யா மீது நூறு கோடி ரூபாய் சொத்துகுவிப்பு வழக்கு நிறுவியில் உள்ளது. இந்த நிலையில் நூறு கோடி ரூபாய் மற்றும் 92 சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. இதுவரையில் சித்தராமய்யா உடைய ரூபாய் 400 கோடி ரூபாய் சொத்துக்கள் சொத்துக்களாகும் ரொக்கமாகும் முடக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையாவின் சொந்த ஊரான சித்தராமாயணஹிண்டி கிராமம் மைசூர் தாலுகாவில் உள்ளது. அவர் சொந்த ஊரில் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தில் தனது முதல்வர் அதிகாரத்தை பயன்படுத்தி அவர் மனைவிக்கு 17 வீட்டு மனைகளை வாங்கி கொடுத்ததாக சித்தராமையா மீது வழக்கு பதிந்தனர்.
மேலும் அமலாக்கத் துறையினர் அவர் மீது வழக்கு தொடர கர்நாடக கவர்னரிடம் அனுமதி கோரினர். இதனை விசாரித்த கவர்னர் அனுமதி அளித்தார். மேலும் இதனை எதிர்த்து சித்தராமையா வழக்கு தொடர்ந்தார் அந்த வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் இன்று ஜூன் 10ஆம் தேதி சித்தராமய்யாவின் 100 கோடி ரூபாய் சொத்து 92 செத்துகளையும் உள்ளது.
ஆக மொத்தம் இதுவரை 400 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது தெரிய வருகிறது. முடக்கப்பட்ட சொத்துக்கள் அனைத்தும் ரியல் எஸ்டேட் மற்றும் தொழிலதிபர்கள் ஏஜெண்டுகள் அவர்களுடைய உறவினர்கள் பெயரில் உள்ளது என்று அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த ஊழல் குற்றசாட்டு கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் கட்சியிலே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.