நுங்கம்பாக்கத்தில் நடந்த பார்ட்டி ஒன்றில் போதைப்பொருட்கள் புழக்கம் அதிகமாக உள்ளது என்று கேள்விப்பட்ட போலீசார் அங்கு சென்று கையும் களவுமாக குற்றவாளிகளை பிடித்திருந்தனர். அதில் முக்கியமான ஒருவர் தான் அதிமுக பிரமுகர் பிரசாத். அவர அவரது ஸ்டேட்டஸில் கூட ஷே நோ டு டிரக்ஸ் அண்டு டி எம் கே என்று டேக் செய்து வைத்துள்ளார். ஆனால் அவர் போதை பொருள் விற்பனையாளர். அவர் கூறிய தகவலின் அடிப்படையில் நடிகர் ஸ்ரீகாந்தை நேற்று காலை விசாரித்த போலீசார் அவருக்கு ரத்த பரிசோதனையும் எடுத்தனர். ரத்த பரிசோதனை முடிவில் ஸ்ரீகாந்த் கொக்கைன் பயன்படுத்தி இருப்பதாக வெளிவந்திருந்தது. அதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் இந்த மாதிரி கேஸில் சிக்கி இருப்பது நல்ல நடிகர் இப்படி ட்ரக்ஸ் அடிட்டாக இருக்காரே என்று பலரும் பதிவிட்டு வந்தனர். இந்நிலையில் தற்போது அவர் கொடுத்த வாக்குமூலங்கள் சமூக வலைத்தளங்களில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அவர் கொடுத்த வாக்கு மூலத்தில் பிரசாத் கைதானதற்கு முன்புதான் அவரிடம் கால் கிலோ கொக்கைன் வாங்கி இருந்தேன். மேலும் அதை வைத்து பார்ட்டி நடத்தியதாகவும் கூறியுள்ளார். இதை எங்கிருந்து பெற்றீர்கள்? யார் யார்? உங்களுக்கு தெரியும்? என்று கேட்டதற்கு, எனக்கு பிரசாத் மட்டுமே தெரியும். அவர் என்னை வைத்து படம் எடுத்து இருந்தார். அந்தப் படத்திற்கான பணத்தைக் கேட்க போன இடத்தில் எனக்கு கொக்கைனை பழக்கப்படுத்தினார். அதன் பிறகு நான் எப்பொழுது சென்றாலும் எனக்கு கொக்கைன் தான் கொடுப்பார் என்று அவர் தெரிவித்துள்ளார்.