பூமிக்குத் திரும்பும் சுபான்ஷு சுக்லா!!எப்போது எந்த நேரம் தெரியுமா??

Subhanshu Shukla returns to Earth

புதுடெல்லி: சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) பல்வேறு ஆய்வுகளை வெற்றிகரமாக முடித்த இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட நான்கு பேர் கொண்ட குழுவினர், வரும் ஜூலை 13 ஆம் தேதி பூமிக்குத் திரும்பவுள்ளனர். இவர்கள் அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ஸ்பேஸ்எக்ஸ் ஃபால்கன் 9 ராக்கெட் மூலம், ஆக்ஸியம் ஸ்பேஸின் ‘ஆக்ஸியம்-4’ திட்டத்தின் கீழ் கடந்த ஜூன் 25 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டனர்.

இந்திய நேரப்படி ஜூன் 25 ஆம் தேதி நண்பகல் 12.02 மணிக்கு அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ‘ஃபால்கான் 9’ ராக்கெட் மூலம் ‘டிராகன்’ விண்கலம் புறப்பட்டது. விண்வெளி நிலையத்தை அடைதல்: சுமார் 28 மணி நேரம் சுற்றுப்பாதையில் பயணித்து, ஜூன் 26 ஆம் தேதி மாலை 4.30 மணியளவில் சர்வதேச விண்வெளி நிலையத்தை டிராகன் விண்கலம் அடைந்தது.

ஆய்வுகள்: இந்த 14 நாள் பயணத்தில், குழுவினர் சுமார் 60 அறிவியல் ஆய்வுகளை மேற்கொண்டனர். சுபான்ஷு சுக்லா மட்டும் இந்தியா சார்பில் 7 தனிப்பட்ட ஆய்வுகளை மேற்கொண்டார். இதில் நுண் ஈர்ப்பு விசை சூழலில் எலும்புகள் மற்றும் தசைகளின் செயல்பாடு, விண்வெளியில் தாவர வளர்ச்சி (குறிப்பாக பாசிப்பயறு மற்றும் வெந்தயச் செடிகளை வளர்த்து), நுண்ணுயிர்களின் செயல்பாடு மற்றும் கதிர்வீச்சால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த ஆய்வுகள் முக்கியமானவை.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள பணிகளை வெற்றிகரமாக முடித்துவிட்டு, சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட நான்கு வீரர்களும் ஜூலை 13 ஆம் தேதி ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து புறப்படுவார்கள். ஜூலை 14 ஆம் தேதி அவர்கள் அமெரிக்காவின் ஃப்ளோரிடா கடற்கரைக்கு வெளியே தரையிறங்குவார்கள் என்று நாசா மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இவர்களின் தரையிறக்கத்தை நாசா நேரலையில் ஒளிபரப்பவும் திட்டமிட்டுள்ளது.

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram