tamilnadu: கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகிறது ,கோடை விடுமுறை முடிந்து மாணவர்கள் மற்றும் மக்கள் தங்கள் பணிபுரியும் இடத்திற்கு செல்ல தமிழக அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்க அறிக்கை வெளியிட்டுள்ளது. வார விடுமுறை மற்றும் பள்ளி திறப்பை முன்னிட்டு தமிழக அரசு போக்குவரத்து கழகம் இந்த முடிவை எடுத்துள்ளது .
கடந்த மாதம் ஏப்ரல் 25ம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்கியது.
கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தால் விடுமுறை காலம் அதிகரிக்கும் என கருதி இருந்த நிலையில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கிய நிலையில் பள்ளி கல்வி துறை அமைச்சர் வெளியிட்ட அறிக்கையின் படி வருகின்ற ஜூன் மாதம் 2 தேதி பள்ளி திறப்பு உறுதி ஆனது . தென்மேற்கு பருவமழையால் தமிழகத்தில் இதமான சூழ்நிலை நிலவுகிறது . இதனால் பள்ளி கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட அறிக்கை படி ஜூன் 2ம் தேதி ஒன்று முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் துவங்கும். வார விடுமுறை மற்றும் பள்ளி திறப்பை முன்னிட்டு 2,510சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளது தமிழக போக்குவரத்து கழகம் .
சென்னை கிளம்பாக்கத்திலிருந்து இருந்து திருச்சி, திருவண்ணாமலை , திருநெல்வேலி , கும்பகோணம் , மதுரை , தூத்துக்குடி , நாகர்கோவில் , சேலம் ,கோவை உள்ளிட்ட இடங்களுக்கு 1,175 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது . அதில் வருகின்ற மே 30 அன்று 570 பேருந்துகளும் அடுத்த நாளான மே 31ம் தேதி 605 பேருந்துகளும் இயக்கப்படும் என அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது .அது மட்டும் இன்றி சென்னை கோயம்பேட்டில் இருந்து பெங்களூரு ,ஓசூர், திருவண்ணாமலை , நாகை , வேளாங்கண்ணி ஆகிய இடத்திற்கு 30ம் தேதி 100 பேருந்துகளும் ,31ம் தேதி 90 பேருந்துகளும் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்து துறை செய்தி வெளியிட்டுள்ளது.
தொலைதூரம் செல்லும் பயணிகள் ஆன்லைனில் பேருந்து டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளுமாறு தமிழக போக்குவரத்து துறை பொது மக்களின் நலன் கருதி கூறியுள்ளது . கூட்ட நெரிசலில் சிக்க வேண்டாம் எனவும்,மேலும் சிறப்பு பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று தமிழக போக்குவரத்து துறை கூறியுள்ளது.