திடீரென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்!!

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை நடைப்பயிற்சி மேற்கொண்டபோது திடீரென லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டது. உடனே அவரது பாதுகாப்பு குழுவினர் விரைந்து நடவடிக்கை எடுத்து, அருகிலுள்ள அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். முதல்வருக்கு தற்போது தேவையான அனைத்து மருத்துவ பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “முதல்வரின் உடல்நிலை சீரான நிலைமையில் தான் உள்ளது. எந்தவித ஆபத்தும் இல்லை. தலைச்சுற்றலுக்கான காரணம் விரைவில் உறுதி செய்யப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் நாள்தோறும் காலை நடைப்பயிற்சியை தவறாமல் மேற்கொள்வது வழக்கம். இந்நிலையில் இன்று ஏற்பட்ட லேசான உடல்நலக்குறைவு அவரது குடும்பத்தினர், கட்சியினர் மற்றும் ரசிகர்களிடையே சிறிது பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக செயல் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உட்பட அவரது குடும்ப உறுப்பினர்கள் தொடர்ந்து மருத்துவமனைக்குள் அவருடன் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அமைச்சர் துரைமுருகன், செவியர், மா.சுப்ரமணியன் உள்ளிட்டோர் உடனடியாக மருத்துவமனைக்கு வந்து முதல்வரின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் ஆலோசித்துள்ளனர். தலைச்சுற்றல் ஏற்பட்டபோதும் முதல்வர் ஸ்டாலின் இன்று காலை திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் எம்.பி அன்வர் ராஜா திமுகவில் இணைந்தார். கட்சித் தொண்டர்கள் அவரது உடல்நிலை விரைவில் நலமடைய பிரார்த்தித்து வருகின்றனர்.

 

 

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram