தமிழகத்தில் வழங்கப்பட்டிருக்கக் கூடிய பேருந்து அட்டைகளுக்கான காலம் முடிவடைய உள்ள நிலையில் அதனை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பது குறித்த முக்கிய தகவலினை தமிழக அரசு மற்றும் போக்குவரத்து துறை தரப்பில் வெளியிடப்பட்டிருக்கிறது.
செப்டம்பர் 7 2023 ஆம் ஆண்டு முதன் முதலில் மாநகர போக்குவரத்து கழகத்தால் இணையவழியில் இத்திட்டமானது மாற்றுத்திறனாளிகள் சுதந்திரப் போராட்ட வீரர்கள் தமிழ் அறிஞர்கள் போன்றவர்களுக்காக இலவச பேருந்து பயண அட்டை திட்டத்தை தமிழக அரசு துவங்கி வைத்தது. அந்த வகையில் பெறப்பட்ட பேருந்து பயண அட்டைகள் 2025 மார்ச் 31ஆம் தேதியோடு முடிவடையுள்ள நிலையில் அதனை ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிப்பு செய்திருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.
தமிழக அரசின் உடைய இலவச பேருந்து பயண ஆட்டையை பெற நினைக்கக் கூடியவர்களுக்கான விண்ணப்ப வழிமுறைகள் :-
இலவச பேருந்து பயண அட்டை ஆனது வயது முதிர்ந்த தமிழறிஞர்கள், தமிழறிஞர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு என தனிதனி பிரிவுகளாக வழங்கப்படுவதாகவும் இவற்றைப் பெற நினைப்பவர்கள் இ சேவை மையங்களுக்கு சென்று தங்களுடைய விவரங்களை பூர்த்தி செய்து தமிழக போக்குவரத்து துறையின் சார்பில் இலவச பேருந்து பயண அட்டையை பெற்றுக் கொள்ளலாம் என்றும் இல்லையென்றால் www.tn.e-sevai என்ற தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் கீழ் சென்று தங்களுக்கான இலவச பேருந்து பயண அட்டையை பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.