தமிழக அரசின் கடுமையான சட்ட மாற்றங்கள்!! மகிழ்ச்சியில் பொதுமக்கள்!!

பொதுமக்கள் மீது அடிக்கடி ஆணவமாகவும், வன்முறையாகவும் கடன் வசூலிக்கப்படும் விவகாரங்கள் தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில், வலுக்கட்டாய வசூலிப்பு முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழ்நாடு அரசு கடுமையான சட்ட மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இந்த மசோதாவுக்கு சட்டமன்றத்தில் ஆதரவு வழங்கிய திமுகவைச் சேர்ந்த தவாக வேல்முருகன், சிபிஎம்-இன் சின்னத்துரை, சிபிஐ-இன் தளிராமசந்திரன், பாமக தலைவர் ஜி.கே.மணி, மற்றும் காங்கிரசின் செல்வபெருந்தகை ஆகியோர், இது சமயோசிதமான மற்றும் மக்களுக்கான பாதுகாப்பு சட்டம் என பாராட்டினர். கடனை வலுக்கட்டாயமாக, மிரட்டல், சொத்து பறிமுதல், கண்காணிப்பு, குடும்பத்தினரிடம் வன்முறை பேச்சு போன்ற வழிகளில் வசூலித்தால், குற்றமாக கருதப்படும்.

இதற்கு 5 ஆண்டுகள் வரை சிறை, ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படும். கடன் வசூலிப்பால் ஒருவர் தற்கொலை செய்தால், கடன் வழங்கிய நிறுவனம் அல்லது அதன் வசூல்காரர்கள் குற்றவாளிகளாக கருதப்படுவர். இது பிணையிலிருந்து விடுதலை பெற முடியாத குற்றம் ஆகும். அரசு சான்றிதழ் பெறாமல் கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக, குறிப்பாக ஆப்ஸ் வழியாக கடன் வழங்கும் நிறுவனங்கள், அடிக்கடி பயங்கரவாதம் போல வசூலிப்பு முறைகளை கடைப்பிடித்து வருகின்றன.

அதிக வட்டி, அடிக்கடி குரூரமான அழைப்புகள், சமூக வலைதளங்களில் அவமதிப்பு இதுவே பலரை தற்கொலைக்குத் தள்ளியுள்ளன. இது தொடர்பாக பல்வேறு வட்டாரங்களில் பிரச்சினை ஏற்பட்ட நிலையில், பல சமூக அமைப்புகள் அரசை சட்ட நடவடிக்கைக்கு அழைத்திருந்தன. இதற்காக இந்த சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. புதிய சட்டம் பலரால் வரவேற்கப்பட்டாலும், இதை செயல்படுத்தும் போது காவல்துறை மற்றும் நிர்வாகம் சீராக செயல்பட வேண்டும் என்பது நிபுணர்களின் கோரிக்கையாக உள்ளது. இந்த சட்டம், சமூக நலனுக்காகவும், நிதி ஒழுங்கு நிலைநாட்டவும் முக்கியமான ஒரு கட்டமாக பார்க்கப்படுகிறது.

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram