வரதட்சணையின் கொடூரம்!! 2 போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் ஆன பின்னணி??

மதுரை மாவட்டத்தில் நடந்த வரதட்சணை கொடுமை வழக்கு சமூகத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. தனியார் பள்ளி ஆசிரியை தங்கப்பிரியா, தனது கணவர் பூபாலன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கொடுமை புகார் அளித்துள்ளார். தங்கப்பிரியாவுக்கும் பூபாலனுக்கும் 2017ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது 60 சவரன் நகைகள், புல்லட் பைக், சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டன. இருந்தும், கணவர் பூபாலன், அவரது தந்தை இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன், மாமியார் விஜயா, நாத்தனார் அனிதா ஆகியோர் மேலும் பணம் மற்றும் நகைகள் வாங்கித் தருமாறு தங்களை சித்ரவதை செய்ததாக கூறப்பட்டுள்ளது. கொடுக்க மறுத்ததால் கணவர் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலின் காரணமாக தங்கப்பிரியா படுகாயமடைந்து, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கணவர் பூபாலன், தன்னை தனி அறையில் அடைத்து வைத்து வாயில் நகங்களை வைத்து கீறியதாகவும், கழுத்தில் குத்தியதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கொடுமை குறித்து பூபாலன் தனது சகோதரி அனிதாவிடம் ஆடியோ வாயிலாக பேசியது வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. தனது மனைவியை சித்ரவதை செய்ததை பூபாலன் பெருமையாக கூற, அனிதா அதைக் கேட்டு எந்தத் தயக்கமும் காட்டாமல் மகிழ்ச்சியுடன் பேசிச் சென்றதாக கூறப்படுகிறது. தங்கப்பிரியாவின் புகாரின் பேரில் பூபாலன் கைது செய்யப்பட்டு காவலில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும், இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன் மற்றும் பூபாலன் இருவரும் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறையில் பணிபுரியும் தந்தை-மகன் இருவரும் இத்தகைய கொடுமை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது சமூகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒரு பெண் ஆசிரியை உயிருக்கு போராடும் நிலையில், வரதட்சணை என்ற நோயின் கொடூர முகம் மறுபடியும் வெளிப்பட்டு மக்கள் மனதை உலுக்கியுள்ளது.

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram