சினிமா : ரவி மோகன் ஆர்த்தி விவகாரத்தில் மோசமாக செய்து வெளியிட்ட கமெண்ட் போட்ட அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பி எச்சரித்துள்ளார் கெனிஷா.
கடந்த ஆண்டு தனது மனைவி கார்த்திகை பிரிவதாகக் கூறி அறிக்கை கூற்றை வெளியிட்டார் ரவிமோகன் அதே நேரம் இந்த விவகாரத்தில் ரவி மோகன் தன்னை கலந்து ஆலோசிக்கவில்லை எனக்கூறி அலச்சியை கிளப்பினார் ஆர்த்தி இதனிடையே பாடகி கெனிஷாவுடன் ரவி மோகனுக்கு தொடர்பு இருப்பதே இந்த விவாகரத்துக்கு காரணம் என்ற சர்ச்சை ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வந்தது. இந்த நிலையில் தான் சமீபத்தில் ரவி மோகனும் கெனிஷாவும் இணைந்து திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றனர் இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி மீண்டும் சர்ச்சையை கிளப்பியது.
இவரை தொடர்ந்து ரவி மோகன் மற்றும் ஆர்த்தி இருவரும் குடும்ப உறவுகளில் இருந்த பிரச்சினைகளை முன்வைத்து மாறி மாறி அறிக்கைகளை வெளியிட்டு வந்தனர். அதே நேரம் இருவருக்கும் இடையிலான பிரச்சினை குறித்து என் சமூக வலைதளங்களில் அறிக்கை வெளியிடக்கூடாது என நீதிமன்றமே சமீபத்தில் உத்தரவிட்டது. இந்த விவாகரத்துக்கு கெனிஷாதான் காரணம் என்று சமூக வலைதளங்களில் பரபரப்பு விமர்சனங்கள் மீண்டும் மீண்டும் முன்வைக்கப்பட்டன.
ஆர்த்தி விவாகரத்துக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என மறுப்பு தெரிவித்து வந்தார். கெனிஷாவுக்கு கொலை மிரட்டல்கள் வருவதாகவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார் கெனிஷா. இந்த நிலையில் இந்த மிரட்டல்களுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கெனிஷா வக்கீல் நோட்டீஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார். செய்திகள் வீடியோக்கள் மோசமான கமெண்ட்கள் மோசமான புகைப்படங்கள் ஆகியவற்றை 48 மணி நேரத்திற்குள் நீக்க வேண்டும் இல்லையென்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கெனிஷா சார்பில் அவரின் வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல ஜெனிஷா வெளியிட்டுள்ள அறிக்கையில் ரவி மோகன் விவகாரம் தொடர்பாக youtube இன்ஸ்டால் ஃபேஸ்புக் எக்ஸ் உள்ளிட்டவற்றில் தன்னைப் பற்றிய அவதூறுகளை யாரும் பேசக்கூடாது என்றும் பாலியல் வல்லுறவு மிரட்டல்கள் மற்றும் கொலை மிரட்டல் விடு வோர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் இடமும் அவர் குறிப்பிட்டுள்ளார்.