சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த திராவிடக் கழக தலைவர் கி வீரமணி செய்தியாளர்கள் பேட்டி எடுத்தபோது தமிழகத்தில் இரண்டு மூன்று முறை தோற்றும் சில கட்சிகளுக்கு புத்தி இல்லை என்று பாஜகவை நேரடியாக சாடியுள்ளார். 2026 இல் மீண்டும் தமிழ்நாடு திராவிடர் மாடல் ஆட்சியை அமையும் அதனை யாராலும் அசைக்க முடியாது. இனிமேல் தமிழ்நாடு திராவிட மாடல் கோட்டை என்று வீரமணி கூறியுள்ளார்.
மேலும் இது தொடர்பாக அவர் வெளியிட்ட விழாவில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் மேலும் அதன் வலி தோன்றிய இந்து கட்சிகள் அனைத்தும் தமிழகத்தில் ஆட்சி பிடிக்காது என்று கூறினார் . இது ராமர் மண் இல்லை இது பெரியார் மண் திராவிட மண் என்று கூறினார். பிஜேபி மக்களிடையே மதகலவரத்தை தூண்டி 2026 தேர்தலை எப்படியாவது வெற்றி பெற்று விடுவோம் என்று நோக்கத்தில் இந்து முஸ்லிம் பிரச்சினை தூன்றுகின்றனர்.
அதைப்போல் முன்னதாக நடந்த திருப்பரங்குன்றம் பிரச்சனை முருகன் கோயிலுக்கு ஆபத்து உள்ளது என்று பொய் பிரச்சாரங்களை கூறி இருபிரிவினர்களுக்கு இடையே மதக்கலவரத்தை பிஜேபி அரசு வேண்டும் என்று உருவாக்கியது. மேலும் அந்த கலவர முயற்சியில் ஈஸ்வனம் போல் வீணாகிவிட்டது. அனைத்து இந்து கோயில்களையும் ஆர்எஸ்எஸ் மற்றும் புரோகிதர்கள் தங்களது ஆதி பீடங்களாக ஆக்கிக் கொள்ள நினைக்கின்றனர். கோயில்கள் மற்றும் திருவிழாக்கள் சடங்குகளை தமிழக மக்கள் என்றும் நம்ப மாட்டார்கள்.
தமிழக மக்கள் அனைவரும் திராவிட கொள்கை உடையவர்கள் என்றும் பகுத்தறிவு சமத்துவம் சுயமரியாதை அனைத்தும் தெரிந்தவர்கள் என்றும் கூறியுள்ளார். என்றும் பிஜேபியும் அதன் கூட்டணி கட்சிகளும் தமிழகத்தில் ஆட்சி அமைக்காது என்று கூறினார். ஆர் எஸ் எஸ் மற்றும் பாஜக கூட்டனி ஆட்சியை அழித்திட காங்கிரஸ் மற்றும் திமுக முயற்சி தோற்றுவிட்டாலும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயம் பிஜேபி மக்களால் நிராகரிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். வரும் 2026 தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்று கூறினார். திமுக கூட்டணி அசைத்து பார்க்க கூட முடியாது அப்படி முடிந்தால் நாளைய வரலாறு சொல்லும் என்பது உறுதி என்று கீ .வீரமணி கூறியுள்ளார்.