TVK: தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று 10 மற்றும் 12 ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த முதல் மூன்று மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். இந்த விழாவில் பங்கேற்று பேசிய அவர் பேசுகையில், நாம ஏன் ஒரே ஒரு படிப்புல மட்டும் நம்ம அச்சீவ் பண்ணியே ஆகணும் அப்படின்னு நினைக்கணும். அதனால ஒன்னும் சாதனை கிடையாது ஒரே விஷயத்தை பத்தி திரும்பத் திரும்ப யோசிச்சு யோசிச்சு இவங்க ஆன்சர் ஏத்திக்காதீங்க அவ்வளவு ஸ்ட்ரெஸ் ஃபுல் ஆக வேண்டிய அவசிய மெல்லாம் ஒன்றுமே கிடையாது இதை நான் ஏன் சொல்றேன்னா நீட் மட்டும் தான் உலகமா? நீட்டை தாண்டி இந்த உலகம் ரொம்ப ரொம்ப பெருசு அதுல நீங்க சாதிக்க வேண்டியது பல விஷயங்கள் இருக்கு.
அதனால இப்பவே உங்க மைண்ட் ரொம்ப ஸ்ட்ராங்கா வச்சுக்கணும் டெமாக்ரசியா வச்சுக்க கத்துக்கோங்க என்ன டெமாகிரஸினு ஒன்னு இருந்தா தான் இந்த உலகமும் சரி இந்த உலகத்தில் இருக்கிற எல்லா ஃபீல்டும் சரி ஒரு சுதந்திரமா இருக்க முடியும். அது மட்டும் இல்ல ஒரு முறையான டெமாக்ரசி ஒரு இருந்தாலே போதும் எல்லாருக்கும் எல்லாமும் சமமா கிடைக்கும்.
அதனுடைய ஃபர்ஸ்ட் ஸ்டெப்பா உங்க வீட்ல இருக்கிற எல்லார்கிட்டயும் சொல்லுங்க அவங்களோட ஜனநாயக கடமையை ஒழுங்கா செய்ய சொல்லுங்க. அது ஒன்னும் பெரிய ஒரு விஷயம் எல்லாம் கிடையாது சாதாரணமான விஷயம் தான் நல்லவங்க நம்பிக்கையானவங்க இதுவரைக்கும் ஊழலே செய்யாதவர்கள் யாரும் பார்த்து தேர்ந்தெடுக்க சொன்னா அதுதான் அந்த கடமை.
இதுக்கு முன்னாடி இதுபோன்ற விழாவில் நான் சொல்லி இருந்தேன் இந்த காசு கொடுத்து ஓட்டு வாங்கி ஜெயிச்சிடலாம்னு நினைக்கிறாங்க இல்லையா அவங்கள அந்த கல்ச்சர்யே வந்து யாரும் என்கரேஜ் பண்ணாதீங்க! யாரும் காசு வாங்காதீங்க உங்க பேரெண்ட்ஸ் கிட்டயும் எடுத்து சொல்லுங்கனு நான் சொல்லி இருந்தேன் அதை அப்படியே ஃபாலோ பண்ணுங்க! ஆனா நீங்க வேணா பாருங்க அடுத்த வருஷம் என்ன நடக்க போகுதுன்னு என்று அரசியல் சூசகத்தையும் கூறியுள்ளார்.