நடைபெற்று வரும் ipl தொடரில் நேற்று குஜராத் மற்றும் ராஜஸ்தான் இரு அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் ராஜஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து பவுலிங் செய்ய முடிவு செய்தது. இதனால் குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. இந்த போட்டியில் முதலில் கலமிரங்கிய குஜராத் அணி 20 ஓவர் முடிவில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 204 ரன்கள் எடுத்து பெரிய இலக்கை நிர்ணயித்தது. இதில் கில் 84 ரன்களும், பட்லர் 50 ரன்களும் விளாசினார்.
தீக்சனா 2 விக்கெட்டுகளும், ஆர்ச்சர் மற்றும் சந்தீப் ஷர்மா தலா ஒரு விக்கெட்டுகளும் வீழ்த்தினர். தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி அதிரடியாக விளையாடியது. ராஜஸ்தான் அணியில் இளம் வீரராக களமிறங்கிய வைபவ் சூர்யவன்ஷி அசாத்திய பேட்டிங்கை வெளிபடுத்தினார். அவரின் அதிரடி ஆட்டத்தால் போட்டி 15.5 ஓவரில் தனது வெற்றி கனியை பறித்தது ராஜஸ்தான் அணி.
அவர் 24 பந்துகளில் அறைசதத்தையும், 35 பந்துகளில் சதத்தையும் பதிவு செய்து இளம் வயதில் குறைவான பந்தில் சதம் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். இதற்கு முன் ரியன் பராக் 17 வயதில் சதம் விளாசியிருந்தார். தற்போது அவரை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார் வைபவ் சூர்யவன்ஷி. இவரின் அசாத்திய திறமையான பேட்டிங் குறித்து அணைத்து முன்னால் வீரர்களும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அவர் முதல் போட்டியில் குறைவான ரன் அடித்து அழுந்து கொண்டே களத்தை விட்டு வெளியேறியது குறிப்பிடத்தக்கது.