சென்னை: சென்னை பெரம்பூர் ராஜீவ் காந்தி நகரில் ஏற்பட்ட ஒரு துயரச் சம்பவம் தற்போது பெரும் கவலைக்குரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாணவர் ஆகாஷ், தனது காதலியுடன் திருமணம் செய்ததாக கூறி வீடு ஒன்றை வாடகைக்கு பெற்றார். “நாங்கள் கணவன் மனைவி,” என்று அந்த வீட்டு ஓனரிடம் தெரிவித்ததால், அந்த வீடு வாடகைக்கு அனுமதிக்கப்பட்டது. ஆனால், அவர்கள் வீட்டில் குடி வந்திருக்கும் மிகக் குறுகிய காலத்திலேயே ஒரே வாரத்தில் அவர்களுக்குள் ஏற்பட்ட வாய் தகராறு, அதிர்ச்சிகரமான முடிவுக்கு காரணமாகி இருக்கிறது.
போலீசாரின் விசாரணைகளின் படி, ஆகாஷ் மற்றும் அவரது காதலியிடையே கடுமையான தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில், ஆகாஷ் தன்னுடைய காதலியை கொலை செய்து விட்டார் எனக் கூறப்படுகிறது.
அதைத்தொடர்ந்து, மனவேதனையில் ஆழ்ந்த ஆகாஷ் தானும் தன் உயிரை மாய்த்துக் கொண்டார் என விசாரணையில் தெரிய வந்துள்ளது. சம்பவம் குறித்து தகவல் பெற்ற ஐசிஎப் போலீசார், உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரண்டு உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக, அந்த பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டுள்ளது. காதலின் பெயரில் ஏற்பட்ட இந்த பரிதாபம் ஒரே வாரத்தில் எடுத்த விபரீத முடிவு அப்பகுதி மக்களிடம் சோகத்தையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது.