பெண்ணை கடத்தி சென்ற கிராம நிர்வாக அலுவலர்??  சேலத்தில் பரபரப்பு!!

சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் வசிக்கும் விஜயலட்சுமி, தனது மகளை கிராம நிர்வாக அலுவலர் (VAO) வினோத்குமார் ஆசை வார்த்தைகளால் கூட்டிச் சென்றுவிட்டதாக குற்றச்சாட்டு முன்வைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று மனவேதனையுடன் புகார் அளித்தார்.

விஜயலட்சுமி தனது குடும்பத்துடன் ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து கொண்டு, நெஞ்சை அடித்துக்கொண்டு கதறி அழுத காட்சி அங்கு இருந்தவர்களை கண்கலங்கச் செய்தது.  என் பெண் எங்கே இருக்கிறாள் என்று கூட தெரியவில்லை. ஆசை வார்த்தைகளால் மோசம் செய்து கூட்டிக்கொண்டு போயிட்டார். என் மகளுக்கு திருமணம் ஆகி குழந்தையும் இருக்கிறது. இப்படி ஒரு அதிகாரி கூட இப்படி செய்கிறாரே என்று நினைத்தாலே கண்ணீர் வருகிறது, என்று அவர் வேதனையை வெளிப்படுத்தினார். கிராம நிர்வாக அலுவலர் வினோத்குமாருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு குழந்தை இருப்பது தெரிய வந்துள்ளது. அவரது முதல் மனைவியுடன் விவாகரத்து தொடர்பான வழக்கு தற்போது ஓமலூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அந்த வழக்கு முடிவுக்கு வராத நிலையில், இப்படி ஒரு சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த புகாரை முன்பு சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் அளித்திருந்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அவர் குற்றம்சாட்டினார். போலீசார் முறையாக விசாரிக்கவும், என் மகளை பாதுகாப்புடன் மீட்டுத் தரவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை அவரது கணவரும் உறவினர்களும் வலியுறுத்தினர். தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து விஜயலட்சுமியை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் அவர், சமாதானம் இல்லை. என் பெண்ணை எனக்கு மீட்டுத் தந்து விடுங்கள், பிறகு தான் நான் இங்கிருந்து எழுந்து போவேன் என்று பிடிவாதமாகக் கூறினார். இதன் பேரில் மாவட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்ட அலுவலரை அழைத்து விசாரணை நடத்த உள்ளதாகவும், தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

 

 

 

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram